இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி டூவீலர் பிரசாரம்: 8ம் தேதி நடக்கிறது

6/6/2025 3:57:01 PM
திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை: உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தங்கம் விலை மீண்டும் சரிவு; சவரனுக்கு ரூ360 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

நீடாமங்கலம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி நீடாமங்கலத்தில் வரும் 8ம் தேதி 200 இருசக்கரவாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் இதற்கான பணிகளை அந்த நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
இந்த பணிகள் தொடர்ந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் அழிந்து விடுவதுடன், விவசாய நிலங்கள் பாலைவனமாகி குடிநீருக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும். எனவே இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடி வருகிறது. இதுபோல பொதுமக்களும், விவசாயிகளும், பல்வேறு அமைப்புகளும் தினந்தோறும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையில் நேற்று முன்தினம் திமுக தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்ததாக அனைத்து கட்சிகள் சார்பில் வரும் 12ம் தேதி மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந் நிலையில் சீர்காழி பகுதியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க ‘ சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம்’  என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 36 இயக்கங்களின் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 விரைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கருத்தரங்கம், பொதுக் கூட்டம், பரப்புரை பயணம், ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதென்று இந்த கூட்டு இயக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்,  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் திருவாரூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரம் வரும் 8ம் தேதியன்று  200 இருசக்கர வாகனங்களில் நீடாமங்கலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் சில
  • திருமணத்திற்காக மதம் மாறினால் கலெக்டர் அனுமதி தேவை: உ.பி-யில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல்



  • தங்கம் விலை மீண்டும் சரிவு; சவரனுக்கு ரூ360 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • விடிய விடிய பெய்யும் கனமழை வீடுகளில் முடங்கிய மக்கள்: நிவர் புயலால் 2வது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் சென்னை



  • 22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் திறப்பு



  • பலத்த சேதம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; நிவர் புயல் சூப்பர் புயலாக மாறும்: விடிய விடிய கரையைக் கடக்கும்



  • நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களுக்கு ஆம்னி சேவை கட்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு



  • தமிழகத்தை `நிவர்’புயல் தாக்கும் அபாயம்; முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி ஆலோசனை



  • அதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீச்சு: நாகர்கோவிலில் இன்று காலை பரபரப்பு



  • தங்கம் விலை அதிரடி சரிவு; ஒரே நாளில் ரூ832 குறைந்தது



  • சென்னையில் இருந்து 350 கி.மீ தூரத்தில் ‘நிவர்’புயல்: வெளுத்துவாங்கும் பலத்த மழை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]