இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அம்பத்தூர் சிடிஎச் சாலையில் மின்வடம் பதிக்கும் பணி மந்தம்: போக்குவரத்து பாதிப்பு

5/8/2025 5:38:15 PM
இன்ஜி. கல்வி கட்டணம் 20 ஆயிரம் உயர்கிறது: அண்ணா பல்கலை பதிவாளர் தகவலால் மாணவர்கள் அதிர்ச்சி நாளை மறுநாள் வாக்குப்பதிவு: ரயில்சேவை அதிகாலை 4 மணிக்கே துவக்கம்

அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் சிடிஎச் சாலையோர பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு பூமியில் மின்வடம் புதைக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சென்னை-திருப்பதிக்கு அம்பத்தூரர் வழியாக சிடிஎச் நெடுஞ்சாலை செல்கிறது. இவ்வழித்தடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை அமைந்துள்ள திருமுல்லைவாயல்-அம்பத்தூர் எல்லையான தனியார் மருத்துவமனையில் இருந்து அம்பத்தூர் காவல் நிலையம் வரை ஆக்கிரமிப்பு காரணமாக சாலை மிகவும் குறுகியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பினால் வாகனங்கள் திணறி வருகின்றன.

  இந்நிலையில், அம்பத்தூர் பஸ் நிலையத்தை சுற்றி சோழம்பேடு சாலை, பழைய நகராட்சி சாலை, பழைய பரோடா வங்கி சாலை, பள்ளிக்கூட தெரு, தெற்கு பூங்கா தெரு, வடக்கு பூங்கா தெரு, மௌனசாமி மடம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிடிஎச் சாலையோரத்தில் கடந்த சில வாரங்களாக ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் சார்பில் பூமியில் மெகா பள்ளம் ேதாண்டி, அதில் மின்வடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் குறுகிய சாலையோரத்தில் சுமார் 7 அடி ஆழத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லவோ, வாகனங்கள் கடந்து செல்லவோ முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் விபத்தில் சிக்கி அடிபடுகின்றனர். இங்கு நிலவும் வாகன நெரிசலில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட நகர முடியாமல் சிக்கி தவிக்கின்றன.

  மேலும், இப்பணிகளால் சிடிஎச் சாலையோர வணிக நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பணிகளை போர்க்காலத்தில் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இப்பணிகள் இன்றுவரை மந்தகதியில் நடைபெறுகிறது.  எனவே, அம்பத்தூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் சிடிஎச் சாலையோரங்களில் தனியார் நிறுவன மின்வடம் பதிப்பு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில
  • விஸ்வரூபமெடுக்கும் பெரம்பலூர் பாலியல் கொடுமை அட்டூழியங்களை மறைக்க பெண்களிடம் பேரம் பேசும் அதிமுக எம்எல்ஏ



  • திமுக முன்னாள் எம்.பி., கோவை மு.ராமநாதன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்



  • கொல்லிமலை குழந்தைகள் விற்பனை விவகாரம் அரசு டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தொடர்பு: விசாரணையில் திடுக் தகவல்



  • சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்



  • சூலூர் அருகே பறக்கும்படை சோதனை தனியார் நிறுவன வாகனத்தில் சிக்கிய ரூ.1.98 கோடி கருவூலத்தில் ஒப்படைப்பு



  • வங்கியில் ரூ. 88.51 கோடி மோசடி சென்னை தொழிலதிபரிடம் 2வது நாளாக விசாரணை: அதிகாரிகளுக்கும் தொடர்பு



  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம்: விவசாயிகள் முடிவு



  • அதிமுக ஒருங்கிணைப்பாளர் போல் செயல்படுகிறார் தேர்தல் ஆணையர் சாஹூ: நடிகை சிஆர் சரஸ்வதி தாக்கு



  • அதிமுக பண விநியோகம் தாராளம் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்: தங்கதமிழ்செல்வன் பேட்டி



  • டிடிவி தினகரன் கூட்டத்திடம் ஜெ.விடம் கொள்ளையடித்த பணம்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]