இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் : பிஎஸ்என்எல் தொழிற்சங்கம் எச்சரிக்கை

2/22/2019 2:54:23 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

திருவாரூர் : ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து  முடிவெடுக்கப்படும் என பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அதிகாரிகள்  கூட்டமைப்பின் மாநில தலைவர் நடராஜன் எச்சரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அவர்  அளித்த பேட்டி: பி.எஸ்.என்.எல்  நிர்வாகத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு  விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை  பெற வேண்டும். பிஎஸ்என்எல் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். 15 சதவீத ஊதிய  நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுடன்  2வது ஊதிய மாற்று குழுவின் விடுபட்ட பரிந்துரைகளையும்  நிறைவேற்ற வேண்டும்  என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து  தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 19ம் தேதி முதல் 21ம்தேதி வரை  நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு  தொலைதொடர்பு துறை தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்தது.

ஆனால் இதையும் மீறி இந்தியா முழுவதும் 72 மணி நேர தொடர்  வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிஎஸ்என்எல்  நிறுவனத்திற்கு மூடுவிழா காண போவதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டுள்ள செய்தி   ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை  நிறுவனங்கள் நாட்டின் நவரத்தினங்கள் என்று கருதப்படுவதால் அதனை பாதுகாத்திட   மத்திய அரசு முன் வர வேண்டும். பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கைகள்  குறித்து  சங்க நிர்வாகிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திட  வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தை தொடர்வது குறித்து  முடிவெடுக்கப்படும்.

மேலும் சில
  • பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்



  • பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தம்பிதுரை இப்போது பல்டி அடித்தது ஏன்?: பரபரப்பு தகவல்கள்



  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக அலுவலகத்தில் மோடி படம்: தொண்டர்கள் அதிர்ச்சி



  • ஜெ.வை விட சிறப்பாக ஆட்சி செய்கிறார் எடப்பாடி: சூலூர் எம்எல்ஏ கருத்து: அதிமுகவினர் கொந்தளிப்பு



  • சென்டர் மீடியனில் மோதி பஸ்சில் பாய்ந்தது கார் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: மேல்மருவத்தூர் அருகே பரிதாபம்



  • மணமக்களை வாழ்த்திய திமுக தலைவர் ஸ்டாலின்: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு



  • அதிமுக எம்பி விபத்தில் பலி: திண்டிவனத்தில் பயங்கரம்



  • தொகுதி பங்கீடு: இன்று மாலை 4 மணி வரை.... அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு



  • அமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]