இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு

2/20/2019 3:44:19 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

புதுடெல்லி:  இந்திய கபடி வீரரான அனுப் குமார் கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்திய கபடி அணியை உலகக் கோப்பையில் வழிநடத்திய அனுப் குமார், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த புரோ கபடி போட்டியில் ஆடுவதற்கு முன்பு தனது ஓய்வை அறிவித்தார். கடந்த 15 ஆண்டு கபடி வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் அவர், தேசிய அணிக்கு 2010 மற்றும் 2014ம் ஆண்டுகளில் தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர். கடந்த 2012ம் ஆண்டு மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார்.சர்வதேச கபடி போட்டிகளை 2006ம் ஆண்டில் இலங்கையில் நடந்த தெற்காசிய போட்டிகளிலிருந்து துவங்கிய இவர், கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்போது தான், 2014ம் ஆண்டு இன்சேன் ஆசிய போட்டிகளையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பை கபடிப்போட்டியையும் இந்திய அணி வென்றது. மேலும், புரோ கபடி கோப்பையின் 2வது சீஸனின் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்தபோது, யூ மும்பா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுகுறித்து, அனுப் குமார் கூறுகையில், ‘‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன். ஆனால், அது காலப்போக்கில் என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியானது. ஒருநாள் இந்திய அணிக்காக நாம் ஆடி தங்கம் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். அந்த கனவு நிறைவேறியதை என்னால் என் வாழ்வில் மறக்கவே முடியாது. ஓய்வு பெற்றாலும் வீரராக அல்லாமல், கபடி விளையாட்டில் என்னால் முடிந்த பணியில் தொடருவேன்” என்று கூறினார்.

மேலும் சில
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்



  • மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி



  • அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்



  • பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்



  • ஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்



  • பெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா



  • யு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு



  • ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்



  • புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி



  • தமிழக வீரர் விஜய் சங்கர், ரிஷப் பன்ட், ரஹானேவுக்கு வாய்ப்பு தோனிக்கு உலககோப்பை கடைசி போட்டியா?: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]