5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை
2/19/2019 3:21:51 PM
தஞ்சை: பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையில் கைதான 3 பேரை போலீசார் கஸ்டடி எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிந்து திருமங்கலக்குடியை சேர்ந்த முகமது தபீக் (24), ஆவணியாபுரத்தை சேர்ந்த தவ்கித் பாட்சா (26), காரைக்காலை சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் (31) ஆகியோரை ைகது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முகமது தபீக், தவ்கித் பாட்ஷா, முகமது ஹசன் குத்தூஸ் ஆகியோரை நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டுமென போலீசார்கேட்டுக்கொண்டனர். நீதிபதி சிவஞானம் விசாரைணை நடத்தி 3 பேரையும் வரும் 22ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்றனர். அவர்களிடம் நேற்று முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்ன, அரசியல் பின்னணி உண்டா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.