பூந்தமல்லியில் நாளை மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம்
2/19/2019 3:00:55 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: பூவிருந்தவல்லி (தனி) சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நாளை (20ம் தேதி) காலை 9 மணியளவில் பூந்தமல்லி ஒன்றியம் நசரத்பேட்டையில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புறை ஆற்றுகிறார். ஒன்றிய, நகர செயலாளர்கள் பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, எம்.ரவிக்குமார், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயசீலன், தி.வே.முனுசாமி முன்னிலை வகிக்கின்றனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஆ.கிருஷ்ணசாமி, மாநில சட்டத்துறை இணை செயலாளர் இ.பரந்தாமன், மாநில மாணவரணி இணை செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், கே.ஜெ.ரமேஷ், கா.பார்த்தசாரதி, காயத்ரி தரன், மு.ராஜேந்திரன், மா.ராஜி, ஜி.ஆர்.திருமலை, ஜெ.ஜெய்மதன், கே.யு.சிவசங்கரி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர். இதில், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.