இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்சி, தஞ்சையில் பெரியார் சிலை அவமதிப்பு: சாலை மறியல்; பதற்றம்

9/24/2018 3:33:48 PM
வருகிற 10ம் தேதி காங். காரிய கமிட்டி கூட்டம்: முதலில் இடைக்கால தலைவரை தேர்வு செய்யணும்...காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கருத்து போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்புடன் வேலூர் எம்பி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: பல இடங்களில் ஓட்டு மெஷின் கோளாறு

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மன்னார்குடி சாலையில்காதராபட்டு பஸ் நிறுத்தத்தில் தந்தை பெரியாரின் முழு உருவசிலை உள்ளது. நேற்று நள்ளிரவு யார் மர்ம நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்து உள்ளனர். இன்று காலை அந்த வழியாக வந்த மக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திராவிடர் கழக நிர்வாகிகள், மற்றும் திமுக நிர்வாகிகள் அங்கு வந்து சிலையில் கிடந்த செருப்புகளை அப்புறப்படுத்தினர். இது குறித்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. திக, திமுக, மதிமுக நிர்வாகிகள் ஒரத்தநாட்டில் திரண்டனர்.

இது குறித்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் கூறும்போது, தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் விஷமிகள் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்’ என்றார். இந்த நிலையில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி ஒரத்தநாடு - மன்னார்குடி சாலையில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். திருச்சி: திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் தோகைமலை மெயின்ரோட்டில் பெரியார் சிலை உள்ளது.

நேற்று இரவு இந்த பெரியார் சிலையிலும் அவமரியாதை செய்யப்பட்டு உள்ளது. பெரியார் கைத்தடி வைத்திருப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையில்கைத்தடி உடைக்கப்பட்டு அதன் அருகிலேயே வீசப்பட்டு உள்ளது.இந்த தகவல் கிடைத்ததும் திராவிடர் கழக நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெரியார் சிலையை அவமதித்த நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.பெரியார் பிறந்த தினத்தையொட்டி சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை போடும்போது ஒருவர் மட்டும் வந்து பெரியார் சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டார்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் இப்போது மீண்டும் ஒரத்தநாட்டிலும், சோமரசம்பேட்டையிலும் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாள் இரவில் 2 இடத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதால் இது திட்டமிட்ட செயல் என்றும், பெரியார் சிலையை அவமதிக்க வேண்டும் என்று ஒரு நெட்ஒர்க் செயல்படுவதாகவும் அவர்களை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் வலியுறுத்தினர்.

மேலும் சில
  • வாலிபருடன் தங்கியிருந்த வடமாநில பெண் படுகொலை: அண்ணாநகரில் பயங்கரம்



  • திருத்தணி அருகே பரபரப்பு: குடிநீர் கேட்டு மக்கள் மறியல்



  • அரபு நாடுகளில் வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு சித்ரவதை: மீட்கப்பட்ட 2 பெண்கள் பேட்டி



  • தென்மேற்கு பருவமழை தீவிரம்: சென்னையில் மிதமான மழை



  • போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்புடன் வேலூர் எம்பி தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: பல இடங்களில் ஓட்டு மெஷின் கோளாறு



  • பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு



  • தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு



  • வேலூர் மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: 3,957 போலீசார், 1,600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு



  • தூத்துக்குடி அருகே கடலில் சிக்கிய மாலத்தீவு மாஜி துணை அதிபர் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • வேலூர் மக்களவை தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுதினம் வாக்குப்பதிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]