இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கல்லூரி மாணவியை கடத்தி மணமுடித்த 17 வயது சிறுவன்: இருவர் மீதும் வழக்கு

9/18/2018 3:43:45 PM
பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு வேலூர் மக்களவை தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: 3,957 போலீசார், 1,600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு

திருவண்ணாமலை: கல்லூரி மாணவியை கடத்தி 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொண்டதாக வந்த புகாரின்பேரில் நீதிபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேற்று கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் ஒரு மனு அளித்தார். அதில் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவரும் எனது மகளை கெங்கலமகாதேவி கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.மகிழேந்தி நேற்று மாலை விசாரணை நடத்த சிறுவனின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுவனை காணவில்லை. அங்கிருந்த பெண்ணிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பெண்ணுக்கு தற்போதுதான் 18 வயது நிறைவடைந்திருப்பதும், இவரை திருமணம் செய்தவருக்கு 17 வயது நிறைவடைந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி திருமணம் செய்து கொண்டு குடும்ப நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண் மீட்கப்பட்டு கடலாடி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் 17 வயதான சிறுவனை, கல்லூரி மாணவி சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும், அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததால் சிறுவன் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் திருமணம் செய்து கொண்ட சிறுவன் மற்றும் கல்லூரி மாணவி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சிறுவனை, 18வயது பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • பள்ளிப்பட்டு அருகே சமூக விரோதிகள் கூடாரமான மகளிர் சேவை மைய கட்டிடம்



  • நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டிகேட்ட ஆசிரியருக்கு அடி, உதை



  • திருமணமான 20 நாட்களில் காதல் கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி



  • தகாத உறவை பார்த்ததால் ஆத்திரம் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை



  • கடனை திருப்பி தராததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் பறிமுதல்



  • ஆட்டோவில் சவாரி ஏற்றுவது போல் பயணிகளிடம் திருடிய கும்பல் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த திருடர்கள் 35 பேர் சிக்கினர்



  • வனப்பகுதியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை மாவோயிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பலி



  • கொலை செய்யப்பட்டதாக புகார்... இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]