இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருக்குவளை, திருவாரூர், காட்டூரில் கருணாநிதிக்காக கரைந்த உள்ளங்கள்

8/9/2025 3:51:48 PM
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு 15ம் தேதி வரை விமான சேவை ரத்து: ராணுவம் குவிப்பால் திடீர் அறிவிப்பு பயன்பாட்டில் இல்லாத 58 சட்டங்கள் நீக்கம்: ஆந்திர சட்டமேலவை சட்டத்தில் திருத்தம்... சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

நாகை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள அவரது வீட்டில் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு நேற்று முன்தினம் இரவு முதல் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நேற்று கருணாநிதி வீடு முன் வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் படத்திற்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வீட்டின் முன் கூடியிருந்த பெண்கள் தங்கள் நெஞ்சிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொண்டு ஒப்பாரி வைத்தனர். இது பார்த்தவர்களின் இதயத்தை உருக்குவதாக இருந்தது. திருவாரூர் அடுத்த காட்டூரில் உள்ள  கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் நேற்று ஏராளமானோர் திரண்டு கருணாநிதி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். மவுன ஊர்வலமும் நடந்தது.  

நினைவிடத்தில் ஆரம்ப   காலம் முதல்  காவலராக பணியாற்றி வந்தவர் அதே ஊரை சேர்ந்த சாமிஅய்யா(75).   தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பணியிலிருந்து ஓய்வு   பெற்றுள்ளார். இவர் கருணாநிதி, அவரது தாயார் நினைவிடத்திற்கு   வரும்போது அவரிடம்  வாழ்த்து பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.   அப்போது அவரது மனைவி  மகாலட்சுமி (65) உடன் வருவார்.  நேற்று  அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் கருணாநிதி உருவ  படத்திற்கு  பொதுமக்கள் மற்றும் திமுகவினர் அஞ்சலி செலுத்தும்   நிகழ்ச்சி  நடந்தது. இதில் கலந்து கொண்ட மகாலெட்சுமி  கருணாநிதியின் மீதான  பாசத்தின்  காரணமாக திடீரென மயங்கி  விழுந்தார். உடனடியாக அருகில்  இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர்  தெளித்து அவரை சுயநினைவிற்கு  கொண்டு வந்தனர். பின்னர் அவர்  கருணாநிதியின் புகைப்படங்களை  கையில் பிடித்தபடி கதறி அழுதார்.

திருவாரூரில் கருணாநிதி படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கருணாநிதி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி  செலுத்தினர். திருவாரூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து மறைந்த கருணாநிதிக்கு எம்எல்ஏ அலுவலகம் முன்பாகவும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பிலும் தலைவர் பாலமுருகன் தலைமையில் ரயில் நிலையத்திலிருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு பேருந்து நிலையம் மற்றும் பனகல் சாலை, தெற்குவீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்து அங்கு கருணாநிதியின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் சில
  • தூத்துக்குடி அருகே கடலில் சிக்கிய மாலத்தீவு மாஜி துணை அதிபர் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • வேலூர் மக்களவை தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுதினம் வாக்குப்பதிவு



  • தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது: சவரன் ரூ27,328க்கு எகிறியது... இன்று 264 ரூபாய் அதிகரிப்பு



  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



  • நீட் தேர்வின் கொலைப் பசிக்கு மற்றொரு மாணவியும் இரையானாள்: தொடரும் ‘நீட்’ பலிகள்



  • ‘சொமாட்டோ டெலிவரி விவகாரம்’ மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை



  • நாளை ஆடிப்பெருக்கு விழா... திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு தீவிரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]