இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட 7 முக்கிய கோயில்களில் சிலைகள் மாயம்: பரபரப்பு தகவல் அம்பலம்

7/24/2018 3:23:03 PM
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு 15ம் தேதி வரை விமான சேவை ரத்து: ராணுவம் குவிப்பால் திடீர் அறிவிப்பு பயன்பாட்டில் இல்லாத 58 சட்டங்கள் நீக்கம்: ஆந்திர சட்டமேலவை சட்டத்தில் திருத்தம்... சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட தமிழகத்தில் 7 முக்கிய கோயில்களில் சிலைகள் மாயமாகியிருப்பது அறநிலையத்துறை  வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,645 கோயில்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம்.  இந்த கோயில்களுக்கு சொந்தமாக விலை மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகள், தங்க, வைர நகைகள், பழங்கால கற்சிலைகள் உள்ளன. இந்த  சிலைகளுக்கு வெளிநாட்டில் மவுசு அதிகம் என்பதால் அதிகாரிகள் சிலர் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சிலையை  கடத்துவதாக கூறப்படுகிறது. இதுவரை அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான 1,800 சிலைகள் காணாமல்  போய் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கான சிலைகள் காணாமல் போயிருப்பது  தெரியவந்துள்ளளது. குறிப்பாக கோயில் பதிவேடுகளில் இருந்து சிலைகளின் விவரங்கள் அதிகாரிகளால் அழிக்கப்பட்டும், மாற்று  சிலைகளை வைத்து பழைய சிலை போல கணக்குகாட்டியும் மோசடி செய்து இருப்பதும் அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவட்டாறு  பெருமாள் கோயில் உட்பட 7 கோயில்களில்  பல கற்சிலைகள், உற்சவர் சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த  சிலைகள் எங்கே இருக்கிறது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை. ேமலும் பழைய சிலைகள் கோயில் பதிவேட்டில் இருந்து அழிக்கப்பட்டு  புதிய சிலைகள் பழைய சிலைகள் போன்று அதிகாரிகளால் கணக்கு காட்டப்பட்டு வந்துள்ளது. இந்த சிலைகள் மாயமானது தொடர்பாக  தற்போது தகவல் கசிந்துள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா 7 கோயில்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை  நடத்தினார். இந்த விசாரணையில் சிலைகள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை. சிலைகள் காணாமல்போன நேரத்தில்  அதிகாரிகளும் சிலை மாற்றியது தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய  விசாரணை நடத்தினால் அதிகாரிகள் பலர் சிக்க வாய்ப்பிருப்பதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான பழங்கால கற்சிலைகள், ஐம்பொன்  சிலைகளுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கடத்தல்காரர்கள் அதிகாரிகள்  சிலருடன் கை கோர்த்துக்கொண்டு, சிலையை மாற்றியுள்ளனர். இதுதொடர்பாக புகார் வந்தால் கூட, அறநிலையத்துறை  உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சிலைகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது 7 கோயில்களில் சிலைகள் மாயமாகி இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த விவகாரத்திலாவது  அறநிலையத்துறை கமிஷனர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான், இந்த விவகாரம்  தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சிலையை கண்டுபிடிக்க முடியும். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும்,  நடவடிக்கை எடுக்க முடியும். இதன்மூலம் அறநிலையத்துறை மீது ஏற்பட்ட களங்கத்தை போக்க வழி ஏற்படும். இவ்வாறு அந்த உயரதிகாரி கூறினார்.

மேலும் சில
  • தூத்துக்குடி அருகே கடலில் சிக்கிய மாலத்தீவு மாஜி துணை அதிபர் கடற்படையிடம் ஒப்படைப்பு



  • வேலூர் மக்களவை தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது: நாளை மறுதினம் வாக்குப்பதிவு



  • தங்கம் விலை தொடர்ந்து உயர்கிறது: சவரன் ரூ27,328க்கு எகிறியது... இன்று 264 ரூபாய் அதிகரிப்பு



  • தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் ரூ.146 கோடியில் 1050 பாலங்கள்



  • போக்சோ சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்... விஜயகாந்த் வரவேற்பு



  • தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • மு.க.ஸ்டாலின் மீது போலீசார் திடீர் வழக்குப்பதிவு



  • நீட் தேர்வின் கொலைப் பசிக்கு மற்றொரு மாணவியும் இரையானாள்: தொடரும் ‘நீட்’ பலிகள்



  • ‘சொமாட்டோ டெலிவரி விவகாரம்’ மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை



  • நாளை ஆடிப்பெருக்கு விழா... திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னேற்பாடு தீவிரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]