கெஜ்ரிவால் தனி செயலரிடம் போலீசார் விசாரணை
7/4/2025 2:41:48 PM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, அரசு தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ், ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சிலரால் தாக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சிசிடிவி கேமரா பதிவுகள் தலைமைச் செயலாளர் அன்ஷூ பிரகாஷ் மீது தாக்குதல் நடந்த நேரத்தை விட 40 நிமிடம் தாமதமாக இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், சிசிடிவி கேமராக்களை பராமரிக்கும் இளநிலை பொறியாளர் ஆகியோரிடம் டெல்லி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.