இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இளம்பெண்ணை கட்டிப்பிடித்து ‘‘இச்’’: மின் ஊழியருக்கு வலைவீச்சு

6/20/2018 3:27:52 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

மன்னார்குடி: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மின்வாரிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கள்ளிக்குடியை சேர்ந்தவர் ஜெயராமன்(42). இவர் மன்னார்குடி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு பணியாளராக வேலை பார்க்கிறார். நேற்று பிற்பகல் மன்னார்குடியில் உள்ள ஒரு வீட்டுக்கு மின் பயன்பாடு கணக்கெடுக்க சென்றபோது அந்த வீட்டில் 22 வயது இளம்பெண்ணும் அவரது ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மளிகை கடைக்கு வேலைக்கு சென்று விட்டார்.  வீட்டுக்குள் சென்று மின் கணக்கெடுத்துவிட்டு கட்டணம் ரூ.520 வந்திருக்கிறது என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

 உங்களுக்காக கட்டணத்தை ரூ.100 ஆக குறைத்து அட்டையில் பதிவு செய்து விட்டேன். இனி ஒவ்வொரு முறையும் மின்சார கட்டணத்தை குறைத்தே பதிவு செய்கிறேன் என்று ஜெயராமன் அந்த பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது. இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஜெயராமன் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரை வெளியே விரட்டிவிட்டு கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் செல்போனில் தனது கணவரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறினார். இதுபற்றி அந்த ெபண்ணின் கணவர் மன்னார்குடி போலீசில் புகார் செய்தார்.

ஜெயராமன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயராமன் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘’ஜெயராமனை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார். ஏற்கனவே இதுபோல் ஒரு பெண்ணிடம் ஜெயராமன் தகாத முறையில் நடக்க முயன்ற புகாரில் தான், இவர் பேரளத்துக்கு மாறுதலாகி வந்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் சில
  • பள்ளிப்பட்டு அருகே சமூக விரோதிகள் கூடாரமான மகளிர் சேவை மைய கட்டிடம்



  • நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டிகேட்ட ஆசிரியருக்கு அடி, உதை



  • திருமணமான 20 நாட்களில் காதல் கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி



  • தகாத உறவை பார்த்ததால் ஆத்திரம் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை



  • கடனை திருப்பி தராததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் பறிமுதல்



  • ஆட்டோவில் சவாரி ஏற்றுவது போல் பயணிகளிடம் திருடிய கும்பல் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த திருடர்கள் 35 பேர் சிக்கினர்



  • வனப்பகுதியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை மாவோயிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பலி



  • கொலை செய்யப்பட்டதாக புகார்... இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]