இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மத்திய அரசின் பாதுகாப்பில்தான் அதிமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது: டிடிவி.தினகரன் பேட்டி

6/11/2025 2:28:13 PM
சென்னை - சேலம் 8 வழிசாலை திட்ட வழக்கில் திருப்பம்: அனைத்து வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும்..ஆகஸ்ட் 7ம் ேததி இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு: அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய நிர்வாகி தகவல்

முத்துப்பேட்டை: மத்திய அரசின் பாதுகாப்பில்தான் அதிமுக அரசு ஓடிக்கொண்டிருக்கிறது என்று டிடிவி தினகரன் கூறினார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டி.டி.வி.தினகரன் எம்எல்ஏ பேட்டி அளித்தபோது கூறியதாவது: காவிரி பிரச்னைக்காக ஜெயலலிதா பல்வேறு வகையிலும் போராடி உறுதியான நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். அவரது பெயரை பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் இப்போது விசித்திரமான ஒரு ஆட்சி நடந்து வருகிறது. யாருக்கோ இவர்கள் கைகட்டி சேவகம் செய்து வருகிறார்கள் என்பது இங்குள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும். ஜெயலலிதா ஆட்சியின் போது விதி எண் 110ஐ பயன்படுத்தி பல்வேறு நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தற்போது இல்லை என சொல்லி தட்டிக்கழிப்பதற்கெல்லாம் முதல்வர் விதிஎண் 110ஐ பயன்படுத்துகிறார். மத்திய அரசின் பாதுகாப்பில் இந்த அரசு ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்களது ஆட்சியில் தொடர முடியாமல் தான் 18 எம்எல்ஏக்களும் வெளியே வந்தனர். இந்த ஆட்சியின் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் தான் எல்லா போராட்டமும் நடக்கும். அதன் பிறகு மக்களவைத் தேர்தல் வந்துவிடும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஆர்.கே.நகர் போலவே மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். வரும் தேர்தலில் 39 இடங்களிலும் வெற்றிப்பெற்று மத்தியில் யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும்.

தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி மூவரும் தகுந்த நேரத்தில் முடிவெடுப்பார்கள். அவர்கள் மூவேந்தர்கள் போல சுதந்திரமாக உள்ளனர். மன்னார்குடியில் புதிய கட்சி உதயம், கொடியேற்றம் குறித்தெல்லாம் எதுவும் சொல்வதிற்கில்லை. இந்த மாதத்தில் கேட்ட சிறந்த ஜோக்குகளில் புதிய கட்சி தகவலும் நல்ல ஜோக் என்பதை தவிர, அந்த கட்சி குறித்து வேறெதுவும் சொல்வதற்கில்லை, திவாகரன் பூமிக்கு அடியில் அதாவது பதுங்கு குகையில் தான் இன்னும் இருந்து வருகிறார். கட்சி பெயரை கேட்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. அண்ணாவிற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அதிமுகவில் அவர் உறுப்பினர் கூட கிடையாது. எப்படி கட்சியினர் அவர் பக்கம் செல்வார்கள்? அவர் என்றும் தனிமரம்தான். இவ்வாறு தினகரன் கூறினார்.

மேலும் சில
  • திருவொற்றியூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா



  • மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா: 1008 செவ்வாடை பக்தர்கள் பாதயாத்திரை



  • தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை கண்டித்து டாக்டர்கள் போராட்டம்: நாடு முழுவதும் 3.50 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்பு



  • மாங்காடு அருகே பைக் திருடிய 3 சிறுவர்கள் கைது



  • ரஜினி, விஜய் படங்களில் பாடிய சினிமா பாடகருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்



  • ஆலப்பாக்கத்தில் வீட்டை உடைத்து ரூ30 லட்சம் கொள்ளை: 15 சவரன் அபேஸ்



  • பொள்ளாச்சியில் தொரட்டி பட நடிகை கண்டுபிடிப்பு: கடத்தவில்லையென வாக்குமூலம்



  • பெருங்குடி மண்டலத்தில் பிளாஸ்டிக் விற்ற 182 கடைகளுக்கு அபராதம்



  • ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்



  • மருத்துவ தின விழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]