இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பரமக்குடியில் துணிகரம் பெண் டாக்டரை கட்டிப் போட்டு 41 பவுன் நகை கொள்ளை

5/21/2018 3:39:02 PM
வடபழனி பணிமனை ஓய்வறை சுவரில் பஸ் மோதி கோர விபத்து: 2 ஊழியர்கள் உடல் நசுங்கி பலி...இடிபாடுகளில் சிக்கிய 6 பேர் படுகாயம் ஓட்டெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தப்புவாரா?: கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (62). மருத்துவ இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு  பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி (61). பரமக்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கீழக்கரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் சென்னையில்  எம்பிபிஎஸ் படித்து வருகிறார். பாலச்சந்திரன்-கிருஷ்ணவேணி தம்பதி வீட்டில் கிளினிக் நடத்தி வருகின்றனர். மகனை பார்ப்பதற்காக பாலச்சந்திரன்  நேற்று சென்னை சென்றார். வீட்டில் கிருஷ்ணவேணி மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில், இவரது வீட்டின் கதவை சிலர் தட்டியுள்ளனர். நோயாளிகள் என நினைத்து, கிருஷ்ணவேணி கதவை திறந்துள்ளார்.  அப்போது 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து, அவரை உள்ளே தள்ளி கதவை பூட்டியது. சத்தமிட்டால் கொலை செய்து விடுவோம் என  கத்தியை காட்டி அவரை மிரட்டியுள்ளனர். பீரோ சாவியை தருமாறு கூறி, கிருஷ்ணவேணியை அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து  அதிலிருந்த 41 பவுன் நகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். கிருஷ்ணவேணியின் கை,  கால்களை கட்டிப் போட்டு, வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு, அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இன்று காலை அக்கம்பக்கத்தினர்,  கிருஷ்ணவேணியின் முனகல் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

கட்டுகளை அவிழ்த்து விட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை  நடத்தினர். ராமநாதபுரத்திருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை குறித்து பரமக்குடி  நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண் டாக்டரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி அருகே இலந்தைகுளம், கருங்குளத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் தூங்கி  கொண்டிருந்த 2 பேரிடம் 14 பவுன் நகையை கொள்ளையைர்கள் பறித்து சென்றனர். பரமக்குடியில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து  வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

மேலும் சில
  • தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்திய கணவன், கள்ளக்காதலிக்கு சரமாரி செருப்படி



  • 1 கிலோ தங்கம் கடத்திய தமிழக வாலிபர் சிக்கினார்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு



  • கள்ள நோட்டு அச்சடித்து தமிழகத்தில் புழக்கத்தில் விட்ட 6 பேர் கும்பல் கைது: 2.76 கோடி பறிமுதல்



  • நகை வியாபாரியை ஏமாற்றி 3.67 கோடியுடன் எஸ்கேப்: 2 பெண் உள்பட 7 பேர் கைது



  • முகப்பேரில் வாலிபரை தாக்கி மொபைல் பறிப்பு



  • பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த காமக்கொடூரன் கைது



  • கடனை திருப்பி கேட்ட தகராறில் கள்ளக்காதலியை கொன்று புதைத்த டிரைவர் 2 மாதத்துக்கு பிறகு கைது



  • தூத்துக்குடி அருகே நடந்த திமுக நிர்வாகி கொலையில் 5 பேர் கைது



  • ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பெண் பிரதிநிதிக்கு செக்ஸ் டார்ச்சர் : ஒருவர் கைது



  • நர்சை தூக்கிச்சென்று பலாத்கார முயற்சி: வாலிபருக்கு தர்ம அடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]