பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை
5/9/2025 3:41:46 PM
அலகாபாத்: உத்தரபிரதேசத்தில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம், புல்பூரை சேர்ந்தவர் பவான் கேசாரி. பாஜவில் முக்கிய பதவி வகித்து வரும் இவரை நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கினர். திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.
குண்டுகள் பாய்ந்ததில் படுகாயம் அடைந்த கேசாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.