கேரளாவில் பரபரப்பு ஆணாக மாற எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை
5/9/2025 3:39:43 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் ஆணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம்பெண் ஹாஸ்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.திருவனந்தபுரம் நேமம் பகுதியை சேர்ந்தவர் ரஹீம். இவரது மகள் ரஹானா(21). ரஹீம் தனது மனைவியுடன் கடந்த வருடம் துபாயில் குடியேறினார். இதையடுத்து மகளை திருவனந்தபுரம் பனவிளையில் உள்ள ஒரு பெண்கள் ஹாஸ்டலில் சேர்த்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ரஹானா ஹாஸ்டலின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் ரஹானா ஆணாக மாறுவதற்கு விரும்பியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ரஹானா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்கு ரஹானாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.