ரங்கம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் நம்பெருமாள் வலம்
5/9/2025 3:37:31 PM
திருச்சி: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் நாளான நேற்று இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபம் வந்தார். பின்னர் பல்லக்கில் புறப்பட்டு பெருமாள், வழிநடை உபயங்கள் கண்டருளி ஆரிய வைசியாள் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள், பெருமாளை வழிபட்டனர். மாலை 6 மணிக்கு நம்பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45க்கு வாகன மண்டபம் வந்து கண்ணாடி அறை அடைந்தார். இன்று காலை சேஷ வாகனத்தில் வலம் வந்தார். மாலையில் அனுமந்தன், 10ம் தேதி காலை தங்க ஹம்சம், மாலை யானை வாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி நெல்லளவு கண்டருளிகிறார். 12ம் தேதி காலை வெள்ளி குதிரை, மாலை தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வருகிறார். வரும் 13ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.