ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த திருடர்களுக்கு சரமாரி அடிஉதை
3/28/2018 3:19:43 PM
ெபரும்புதூர்: வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த திருடர்களை பொதுமக்கள் பிடித்து சரமாரி தாக்கினர். சென்னை தாம்பரம் அருகே ஒரத்தூர் ஊராட்சி, நீடாமங்கலம் கிராமம், எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (68). இவர் ஆடிட்டர். இவரது மனைவி ஜெயந்தி (54). இவர்கள் கடந்த 2 நாளுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, டெல்லியில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றனர்.இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் இவரது வீட்டில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. டிவி ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சென்று, சீனிவாசனின் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். வீட்டின் உள்ளே சந்தேகம்படும்படி 2 பேர் நடமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே பொதுமக்கள் தங்களை பார்த்துவிட்டதால் தப்பியோட வெளியே வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்ததை கண்டு மர்ம நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அடிப்படையில், எஸ்ஐ சண்முகம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரை்ந்தனர். வீட்டுக்குள் போலீசார் சென்று பார்த்தபோது கொள்ளையடித்த பொருட்களை மூட்டையில் கட்டிவைத்திருந்தனர். பின்னர் ஒரு அறையில் இருந்த கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசார் பிடியில் இருந்த கொள்ளையர்களை சரமாரி அடித்து உதைத்தனர். இதில் ஒருவனுக்கு மண்டை உடைந்தது. பின்னர் அவர்களை போலீசார் மீட்டு கொண்டு சென்றனர். படுகாயம் அடைந்தவன் படப்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் செம்மஞ்சேரியை சேர்ந்த ஆனந்த் (41), ரமேஷ் (27) என்பதும் பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தவர்கள் என்றும் தெரிந்தது.இதனிடையே கொள்ளை நடந்துள்ளது பற்றி டெல்லியில் உள்ள சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.