இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாணவன் மயங்கி விழுந்து சாவு : பொதுமக்களால் தாக்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் கைது

1/18/2018 3:06:07 PM
கூட்டணியில் இருந்து விலகல்; அதிமுக அரசுக்கு எதிராக 84 தொகுதிகளில் பிரசாரம்: கருணாஸ் பேட்டி காங்கிரஸ் நேர்காணல் முடிந்த பின்னர் திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

பெரம்பூர்: பள்ளி மைதானத்தில் மாணவன் மயங்கிவிழுந்து இறந்ததற்கு காரணமான உடற்கல்வி ஆசிரியரை பொதுமக்கள் சரமாரி அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் இன்று கைது செய்தனர். சென்னை திருவிக.நகர் 17வது தெருவை சேர்ந்தவர் முரளி (41). இவர் அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்துகிறார். இவரது மனைவி சித்திரபாவை (37). இவர்களுக்கு ஒரு மகளும் நரேந்திரன் (15) என்ற மகனும் உள்ளனர். மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நரேந்திரன் 10ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது தாமதமாக வந்ததாக கூறி நரேந்திரன் உட்பட 6 மாணவர்களை பள்ளியை சுற்றி ஓடி வரும்படி உடற்பயிற்சி ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. அப்போது  நரேந்திரன் மயங்கி விழுந்துள்ளான். உடனடியாக மாணவனை கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு நரேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து  மாணவனின் தந்தை முரளி, திருவிக.நகர் போலீசில் புகார் செய்தார். புகாரில், ‘’உடற்கல்வி ஆசிரியர்  தண்டனை கொடுத்ததால்தான் எனது மகன் மயங்கி விழுந்து இறந்துவிட்டான். எனவே, உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் திருவிக.நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி, செம்பியம் உதவி கமிஷனர் அர்னால்டு ஈஸ்டர், திருவிக.நகர் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காவல்நிலையத்தில் இருந்து போலீசாருடன்  பள்ளிக்கு சென்றனர்.

பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது நரேந்திரன் பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாணவனுக்கு தண்டனை வழங்கிய உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதனிடையே, உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை மாணவனின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தலைமறைவான  உடற்கல்வி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உடற்பயிற்சி ஆசிரியரை கைது செய்யக்கோரி இன்று காலை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் பள்ளி எதிரே மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதனிடையே, பள்ளி முதல்வர் அருள், உடற் பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங் ஆகியோரை போலீசார்  இன்று கைது செய்தனர். இதையடுத்து மறியல் கைவிட்டனர்.

மேலும் சில
  • கூட்டணியில் இருந்து விலகல்; அதிமுக அரசுக்கு எதிராக 84 தொகுதிகளில் பிரசாரம்: கருணாஸ் பேட்டி



  • காங்கிரஸ் நேர்காணல் முடிந்த பின்னர் திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி



  • கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி



  • 20 தொகுதிகள் ஒதுக்கீடு; அதிமுக தலைவர்கள் மீது பாஜக கடும் அதிருப்தி: நள்ளிரவில் ஒப்பந்தம் வெளியானது ஏன்? பரபரப்பு தகவல்கள்



  • மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நாளை திமுகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டு தொலைநோக்கு திட்டம் வெளியீடு: ‘தமிழக வளர்ச்சிக்கான வழிகாட்டி’ என அறிவிப்பு



  • பாமக தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் புறக்கணிப்பு: கட்சியினர் அதிர்ச்சி



  • தமிழகத்தின் “விடியலுக்கான முழக்கம்” என்ற பெயரில் திருச்சியில் நாளை மறுநாள் திமுக மாபெரும் பொதுக்கூட்டம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு



  • மதசார்பற்ற அணிக்கு தலைமையேற்க ரங்கசாமிக்கு திமுக திடீர் அழைப்பு: புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்



  • நாளையுடன் நேர்காணல் முடிகிறது திமுக வேட்பாளர் பட்டியல் 10ம் ேததி வெளியீடு: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • நீண்ட இழுபறிக்கு பின் அமமுகவை சேர்க்காமல் பாஜகவுக்கு 26 சீட் ஒதுக்கீடு: சென்னையில் 5 தொகுதி உள்பட கேட்கும் தொகுதிகளை வழங்கியது அதிமுக



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]