3 மாநில சட்டசபை தேர்தல் பாஜ தலைவர்களுடன் மோடி ஆலோசனை
1/11/2025 4:49:55 PM
புதுடெல்லி : கர்நாடகம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் இதர பொது செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தபின்னர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அசாம், மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனித்தும், ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 19 மாநிலங்கள் பாஜவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு 7க்கும் மேற்பட்ட மாநில சட்டபேரவைக்கு தேர்தல் வருகிறது. முதல்கட்டமாக கர்நாடகம், திரிபுரா மற்றும் மேகாலயாவுக்கு மே மாத வாக்கில் ்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜ ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பிரசார யுத்திகள் குறித்து ஆராய்வதற்காகவும், புதிய செயல்திட்டங்களை வகுப்பதற்காகவும் பிரதமர் மோடி தலைமையில் பாஜ உயர்நிலைக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பொது செயலாளர்கள் கலந்து ெகாள்கிறார்கள்.