பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களை பயன்படுத்த விடுமுறை அறிவிப்பு : அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு
1/11/2025 3:48:05 PM
சேலம் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அதன் டிரைவர்களை பயன்படுத்த அரசு திட்ட மிட்டிருப்பதாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூக முறையில் முடியாததால், பஸ் ஸ்டிரைக்கில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூ உள்ளிட்ட 21 ெதாழிற்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இன்று (11ம் தேதி) 8வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. சேலம் கோட்டத்தில், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு மிக குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. பொங்கல் விடுமுறை நாளை தொடங்குவதால், இன்று மாலை அதிகளவு மக்கள் வெளியூர் செல்ல புறப்படுவார்கள். அவர்களுக்கு உரிய பஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க கூடுதலாக தற்காலிக டிரைவர்களை பணியமர்த்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் கோட்ட சிஐடியு தொழிற்சங்க பொதுச்செயலாளர் செல்வகுமார் கூறியதாவது: அரசு துறைகளில் பணியாற்றும் டிரைவர்களுக்கு இணையான ஊதியத்தை கனரக வாகனமான பஸ்களை இயக்கும் எங்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதே எங்களின் முதன்மை கோரிக்கை. அதை நிறைவேற்ற அரசு முன்வராமல், பொய்யான சம்பள உயர்வு பட்டியலை தெரிவித்திருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் பொய் பேசி வருகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஐகோர்ட்டில் எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளோம். ஆனால் அதற்கு எதிர்மறையாக அரசு நடந்து கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவித்ததன் மூலம், அதன் பஸ் டிரைவர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, தனியார் கல்லூரி பேருந்துகளை வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நாளைய தினம் தனியார் கல்லூரி பஸ்களை சென்னை யில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு இயக்கவும் திட்டமிட்டுள்ளனர். மக்கள் உயிர் மீது அக்கறையின்றி அரசு செயல்படுகிறது என்றார்.