இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை

12/27/2017 3:48:18 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

கூடுவாஞ்சேரி : சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, ஓம்சக்தி நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி செளம்யா (33). சிறுசேரி சிப்காட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரே மகன் உள்ளார். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு கடந்த 24-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு செளம்யாவும் அவரது மகனும் கிளம்பி சென்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (47). அப்பகுதியில் வாட்டர்கேன் சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 2 மகன்களும் கேளம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களை வாரம் ஒருமுறை சீனிவாசன் சென்று சந்தித்து வருவது வழக்கம். இதேபோல், தனது மனைவி மற்றும் மகன்களை பார்க்க கடந்த 24-ம் தேதி சீனிவாசன் கேளம்பாக்கத்துக்கு சென்றார். இந்த 2 வீடுகளும் பகல் நேரங்களில் பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல், இவர்களின் வீட்டை கடந்த 25-ம் தேதி இரவு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தது. மறுநாள் காலை சீனிவாசன், சௌம்யா ஆகியோரின் 2 வீடுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வெளியூருக்கு சென்ற சௌம்யாவுக்கும் சீனிவாசனுக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் இருவரும் கூடுவாஞ்சேரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று சோதனை செய்தனர். சௌம்யா வீட்டு பீரோவில் சுமார் 45 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதும், சீனிவாசனின் வீட்டில் 15 சவரன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்றனர். அங்கு இருவரது வீடுகளிலும் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

மேலும் சில
  • சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அதிகாரிகள் 2 பேருக்கு சரமாரி அடி, உதை



  • மகளை கல்லூரியில் விட சென்ற போது பயங்கரம் ரியல் எஸ்ேடட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை



  • மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கள்ளக்காதலன் சரமாரி அடித்து கொலை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]