இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மோடியின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது மன்மோகனுக்கு ஆதரவாக சரத்பவார் பேச்சு

12/13/2017 3:53:29 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

நாகபுரி: மன்மோகன் சிங் மீதான பிரதமர் மோடியின் தரம்தாழ்ந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விமர்சனம் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பேசியதாவது: அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், எதிர்க்கட்சியினருக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார். இத்தகைய மிரட்டல் பேச்சுகள் ஏற்புடையவை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகளை இவ்வாறு அச்சுறுத்துமானால், அதே மக்கள் அவர்களது அதிகாரத்தைப் பறிப்பார்கள்.

விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்வதாகவும், நிலுவைத் தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும் மாநில அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை எந்தத் தொகையும் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. பயிர்க் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் வரை மின்கட்டணம் உள்பட எந்த விதமான வரியையும் விவசாயிகள் செலுத்தக் கூடாது. மொத்தத்தில் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் மத்திய, மாநில பாஜக அரசுகள் தோல்வியடைந்துவிட்டன. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளது என்றும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மணிசங்கர் அய்யர் வீட்டில் அமர்ந்து அதற்காக திட்டம் தீட்டியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இத்தகைய அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வெட்கத்துக்குரிய செயல். இதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் மாண்பையே அவர் சிறுமைப்படுத்திவிட்டார். மன்மோகன்சிங் மீதான தரம்தாழ்ந்த குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இவ்வாறு  சரத்பவார் தெரிவித்தார்.

மேலும் சில
  • குஜராத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் சரிவு மாநிலங்களவை தேர்தலில் 2 எம்பிக்களை பாஜ இழக்கும்



  • குஜராத்தை கலக்கிய நோட்டா: தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியது



  • மோடி ஹீரோ நான் ஜீரோ தவறான கணிப்பு வெளியிட்ட பாஜ எம்பி மன்னிப்பு



  • குஜராத், இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜ வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை



  • குஜராத்தில் பாஜவுக்கு தோல்விபயத்தை காட்டிய ராகுலின் நம்பிக்கை அவரை முன்னெடுத்து செல்லும்: சிவசேனா பாராட்டு



  • முதல்வர் வேட்பாளர் தோல்வி எதிரொலி இமாச்சல் பிரதேசத்தில் சிஎம் பதவிக்கு கடும் போட்டி: நட்டா, தாக்கூர் களத்தில் குதித்தனர்



  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் வராத பணம் ரூ.7961 கோடி கண்டுபிடிப்பு: மக்களவையில் அமைச்சர் தகவல்



  • குஜராத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்காததால் காங்கிரஸ் தோல்வி: பிரபுல் படேல் கருத்து



  • காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



  • மோடியின் சொந்த ஊரில் பாஜ வேட்பாளர் தோல்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]