இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மல்லையா, லலித் மோடி வெளிநாடு தப்பிய விவகாரம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

12/13/2017 3:53:26 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

புதுடெல்லி: குற்றங்கள் இழைத்து, வெளிநாட்டுக்கு தப்பியோடுவோரை கைது செய்து, இந்தியா கொண்டு வரப்படாததற்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிப்பதே கிடையாது’ என, நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.கர்நாடகாவைச் சேர்ந்த, மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, ‘கிங்பிஷர்’ விமான சேவை நிறுவனம் துவங்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பினார். ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக், முன்னாள் தலைவர், லலித் மோடி, ஊழல் வழக்கில் சிக்கிய பின், பிரிட்டனுக்கு தப்பியோடினார். இவர்கள் இருவரையும், இந்தியாவுக்கு கொண்டு வர, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, ‘புஷ் புட்ஸ் ஓவர்சீஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை நடத்தி வந்த பெண் தொழிலதிபர், ரிதிகா அவஸ்தி, மோசடி வழக்கில் சிக்கினார். அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றம்மறுத்து விட்டது. இதையடுத்து, 2016 ஜனவரியில் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய ரிதிகா, ஜாமின் பெற்றார். ஐரோப்பிய நாடான, பிரிட்டன் செல்ல நீதிமன்றத்திடம் அனுமதியும் பெற்றார். குறிப்பிட்ட காலம் கடந்த பின்னும், அவர் நாடு திரும்பவில்லை. அவரை நாடு கடத்தி, இந்தியா அழைத்து வருவதற்கான முயற்சிகளில், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி, அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:இந்தியாவில் குற்றம் புரிந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர்களை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதில், அரசு உறுதியானநடவடிக்கைகளை எடுக்கவில்லை.என்ன மாதிரியான மனப்பான்மையுடன், இந்த அரசு செயல்படுகிறது? உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை, அரசு மதிப்பதே கிடையாது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, பலமுறை எச்சரிக்கைகளுடன் அவகாசம் தந்த போதும், எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும், யாராவது தப்பிச் செல்கின்றனர். ஆனால், அதை பற்றி, இந்த அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. இந்த வழக்கில், எட்டு மாதங்களாக, அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, கூடுதல் சொலிட்டர் ஜெனரல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மேலும் சில
  • குஜராத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் சரிவு மாநிலங்களவை தேர்தலில் 2 எம்பிக்களை பாஜ இழக்கும்



  • குஜராத்தை கலக்கிய நோட்டா: தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியது



  • மோடி ஹீரோ நான் ஜீரோ தவறான கணிப்பு வெளியிட்ட பாஜ எம்பி மன்னிப்பு



  • குஜராத், இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜ வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை



  • குஜராத்தில் பாஜவுக்கு தோல்விபயத்தை காட்டிய ராகுலின் நம்பிக்கை அவரை முன்னெடுத்து செல்லும்: சிவசேனா பாராட்டு



  • முதல்வர் வேட்பாளர் தோல்வி எதிரொலி இமாச்சல் பிரதேசத்தில் சிஎம் பதவிக்கு கடும் போட்டி: நட்டா, தாக்கூர் களத்தில் குதித்தனர்



  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் வராத பணம் ரூ.7961 கோடி கண்டுபிடிப்பு: மக்களவையில் அமைச்சர் தகவல்



  • குஜராத்தில் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்காததால் காங்கிரஸ் தோல்வி: பிரபுல் படேல் கருத்து



  • காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



  • மோடியின் சொந்த ஊரில் பாஜ வேட்பாளர் தோல்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]