காதல் திருமணத்தை எதிர்த்த சகோதரி வெட்டிக்கொலை: தம்பி வெறிச்செயல்
12/13/2017 3:51:22 PM
சோளிங்கர்: வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் சேட்டு(30), நவீன்(25), மகள் அமுதா(28). இதில் அமுதா மற்றும் சேட்டுவுக்கு திருமணம் ஆகிவிட்டது.இந்நிலையில் நவீன் அம்மூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். நேற்று மாலை நவீன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நவீனின் அண்ணன் சேட்டு, அண்ணி சகுந்தலா, அக்கா அமுதா ஆகியோர் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதனர். இதனால் ஆத்திரமடைந்த நவீன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து சேட்டு, சகுந்தலா, அமுதா ஆகியோரை சரமாரி வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அமுதா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த சேட்டு, சகுந்தலா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவங்களை பார்த்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார்.தகவல் அறிந்த அரக்கோணம் டிஎஸ்பி குத்தாலிங்கம், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நவீனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.