இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கர்நாடக வாலிபர் படுகொலை: கள்ளக்காதலி உள்பட3 பேர் கைது

12/13/2017 3:50:25 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் கங்கிலிபுரா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (32). கார் மெக்கானிக். இவர், கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பகுதியில் உள்ள பொன்மலை கோயில் அருகே, கடந்த 10ம் தேதி கழுத்தறுத்த நிலையில் இறந்து கிடந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த விவரம் வருமாறு:கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் முரளி (36). இவர் பழையபேட்டை காந்தி சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு உஸ்தலஅள்ளியை சேர்ந்த மோனிகா மம்தாதேவி (32) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே மம்தாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் நீண்டநாட்களாக பழக்கம் இருந்துள்ளது.

திருமணமான பின்பும், இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனிடையே, கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மேஸ்திரி மேச்சேரி (எ) செவத்தான் (40) என்பவருடன் மம்தாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அடிக்கடி பெங்களூருவில் இருந்து வந்து சென்ற கிருஷ்ணா பற்றி செவத்தான் மம்தாவிடம் கேட்டுள்ளார். அப்போது, கிருஷ்ணா தனது முன்னாள் காதலன் என்றும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், அவரை தீர்த்து கட்டினால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் மம்தா கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த சனிக்கிழமை கிருஷ்ணாவை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்த மம்தா, அவருடன் பைக்கில் தேவசமுத்திரம் கோயிலுக்கு சென்றார். பின்னர், கோயில் அருகேயுள்ள மறைவிடத்தில் உல்லாசமாக இருக்கலாம் என கூறி கிருஷ்ணாவை அழைத்துச் சென்றார்.

அங்கு மறைந்திருந்த செவத்தான் மற்றும் அவரது நண்பர் மேலேரிக்கொட்டாயைச் சேர்ந்த சக்திவேல் (21) ஆகியோர் சேர்ந்து, கத்தியால் தலையில் ஓங்கி அடித்தனர். மயங்கி விழுந்த கிருஷ்ணாவின் கழுத்தை அறுத்தும், சரமாரியாக குத்தியும் கொலை செய்தனர். இதையடுத்து மம்தா, அவரது கள்ளக்காதலன் செவத்தான், சக்திவேல் ஆகியோரை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
கைதான மூவரையும், கிருஷ்ணகிரி ஜேஎம் 2 கோர்ட்டில் நடுவர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், செவத்தான், சக்திவேல் ஆகியோரை சேலம் மத்திய சிறையிலும், மம்தாவை பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர்.

மேலும் சில
  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



  • திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம்: போலீஸ்காரருக்கு வலை



  • குமரி அருகே இன்று காலை பயங்கரம்: முன்னாள் ராணுவ வீரர் குத்திக்கொலை: எம்பிபிஎஸ் மாணவர் கைது



  • கைதான 8 பேர் கோர்ட்டில் இன்று ஆஜர்: கோவை ஏடிஎம் கொள்ளை கும்பல்: தலைவனை பிடிக்க தனிப்படை



  • உ.பியில் பயங்கரம்: மைனர் பெண் தீ வைத்து எரிப்பு



  • நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 30 பவுன் நகை கொள்ளை: டவுசர் கொள்ளையர் அட்டகாசம்



  • யானை தந்தம் கடத்தல் 4 பேர் அதிரடி கைது



  • வளர்ப்பு மகளை சீரழித்த தந்தைக்கு ஆயுள் தண்டனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]