சிலை கடத்தல் வழக்கில் டிஎஸ்பி கார் பறிமுதல்
12/13/2017 3:48:54 PM
கும்பகோணம்: அருப்புக்கோட்டையில் 2008ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக இருந்த காதர்பாட்சா, ஞான அன்பு என்பவரிடமிருந்து 3 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்காமல் விற்று விட்டார்.
போலீசார் வழக்குப்பதிந்து கடந்த செப்டம்பர் 13ம் தேதி டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றிருந்த காதர் பாட்சாவை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்ததில் சிலைகளை எடுத்து செல்ல ஒரு காரை அவர் பயன்படுத்தியதும், அந்த காரை தூத்துக்குடியில் விற்றுவிட்டதும் தெரியவந்தது. அந்த காரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஒப்படைத்தனர்.