இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் சொந்த கிராமத்தில் சோகம்

12/13/2017 3:45:53 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

சங்கரன்கோவில்: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் துளையிட்டு மூன்றரை கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி கொள்ளைப்போனது. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, அங்கு கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, சங்கரன்கோவில் தாலுகா மூவிருந்தாளி, சாலைப்புதூரை சேர்ந்தவர். மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் படித்தார். போலீஸ் துறையில் ஆர்வமாக இருந்த அவர் படிப்பை முடித்த பின்னர் போலீஸ் தேர்வு எழுதி திருச்சி சிறப்பு போலீஸ் படை பட்டாலியனில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, கடந்த 2015ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். மதுரவாயல் இன்ஸ்பெக்டராக கடந்த அக்.10ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இவர் குடும்பத்துடன் சென்னை அருகே ஆவடி வசந்தம் நகர் நேரு தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி பானுரேகா (42). சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியை. இவர்களது மூத்த மகன் ரூபன் பெரியராஜ், சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கிறார். இளையமகன் ராமன் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.பெரியபாண்டி, சுட்டுக் கொல்லப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சுறுசுறுப்புக்கு பெயர்போனவர்சுறுசுறுப்புடனும் துடிப்புடனும் பணியாற்றி பல்வேறு கொள்ளை, கொலை வழக்குகளை கண்டுபிடித்துள்ளார். இதன் அடிப்படையில்தான்  ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இடம் பிடித்தார்.பெரியபாண்டி தந்தை செல்வராஜ். இவர் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் ராமாத்தாள். தங்கைகள் சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா. தம்பிகள் ஜோசப், அந்தோணிராஜ். பெரியபாண்டி மட்டுமே பட்டதாரி.


மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]