கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஆந்திராவில் வில்லேஜ் மால் திட்டம் அறிமுகம்
12/13/2017 3:41:20 PM
அமராவதி: நகர்ப்புறங்களை சேர்ந்த மக்களை போன்று கிராமங்களில் வசிப்போருக்கு தரமான பொருட்கள் கிடைக்கும் வகையில், வில்லேஜ் மால் என்ற திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். விஜயவாடா, குண்டூர் பகுதிகளில் வில்லேஜ் மால் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘நகர்புறங்களைபோல் கிராமத்தினருக்கு தரமான பொருட்கள் கிடைக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 28 ஆயிரம் ரேசன் கடைகள் வில்லேஜ் மால்களாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதில், 500 வகையான பிராண்டுகள், 4 முதல் 35 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். இந்த மால்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.