இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

3 சதவீத கமிஷன் தொகையுடன் ஏலம் கேட்க வேண்டும் பார் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் பகிரங்க மிரட்டல்

12/13/2017 3:39:39 PM
சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர் எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 5700 டாஸ்மாக் கடைகளில் மொத்தம் 2300 பார்கள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையில் 1.5 சதவீதத்தை அரசுக்கு கட்டணமாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர். திடீரென இந்த தொகை 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 3 சதவீத கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்றுபார் உரிமையாளர்கள் டெண்டர் எடுப்பதையும் புறக்கணித்து வந்தனர்.
ஆனால் கமிஷன் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்காததால் பார் உரிமையாளர்கள் பல நாட்களாக பார்களை மூடிவிட்டனர். இதனால், தமிழக அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் துணை முதல்வர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து 3 சதவீதம் என்பதை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் வரும் 18ம் தேதி, பார்களுக்கு ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை புறக்கணிக்க பார் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே டாஸ்மாக் அதிகாரிகள், பார் உரிமையாளர்களை டெண்டர் எடுக்கக்கோரி மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாக பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ‘’3 சதவீத கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். வரும் 18ம் தேதி மறுபடியும் டெண்டர் நடக்கிறது. சில பார் உரிமையாளர்களை டெண்டர் எடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். டெண்டர் நடத்தப்படும் அன்று வைக்கப்படும் பெட்டிகளை இன்றே வைக்க இருக்கின்றனர்.

இதில் ஏலம் எடுப்பதற்கான மனுவை உடனடியாக போட வேண்டும் என்றும் கூறுகின்றனர். 3 சதவீத கமிஷன் தொகைக்கு தற்போது ஏலத்தை எடுத்துகொள்ள வேண்டும். ஏலம் எடுத்த பிறகு கமிஷன் தொகை படிப்படியாக குறைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே டாஸ்மாக் பார்களை ஏலம் எடுப்பதை புறக்கணித்து வந்த பார் உரிமையாளர்கள் அதிகாரிகளின் மிரட்டலால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்’ என்றார்.

மேலும் சில
  • சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம் திருநள்ளாறில் பக்தர்கள் குவிந்தனர்: நளன் குளத்தில் புனித நீராடினர்



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மது விற்பனைதான் வளர்ச்சி அடைந்துள்ளது: தமிழிசை பேட்டி



  • தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம் 25ம் தேதி வரை தற்காலிக நிறுத்தம்



  • எங்கு பார்த்தாலும் ரூ.2000 நோட்டுகள்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு ரூ.10,000: சர்வசாதாரணமாக உலா வரும் அமைச்சர்கள்



  • கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: ஆர்.கே.நகர் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை ரத்து செய்தால் பல கோடி ரூபாய் செலவு செய்தது வீண் தேர்தல் ஆணைய அதிகாரி ஆதங்கம்



  • கவர்னர் ஆய்வு மேற்கொண்டு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது சரத்குமார் அறிக்கை



  • குமரியில் இன்று ஓகி புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர், கவர்னர், முதல்வர் நேரில் ஆய்வு: 3500 போலீஸ் குவிப்பு



  • 96வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து



  • ஓகி புயல் நிவாரணமாக ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]