ஊழலை ஒழிக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: அன்னா ஹசாரே
12/6/2025 4:14:01 PM
புதுடெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு போதிய அக்கறையில்லை. லோக்பால் சட்டத்தில் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டாம் என மத்திய அரசு திருத்தம் செய்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம். பாஜ ஆளும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏன் ஏற்படுத்தவில்ைல. அங்கும் எதிர்கட்சி தலைவர்கள் இல்லையா? மத்திய அரசைக் கண்டித்து அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இவ்வாறு ஹசாரே கூறினார்.