கற்பக விநாயகா கல்லூரி 12ம்ஆண்டு பட்டமளிப்பு
12/4/2025 4:57:29 PM
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குநர் அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். ஆலோசகர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முதல்வர் காசிநாதபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தார்.
தைவான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாசார மைய இயக்குநர் சார்லஸ் லீ சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் டிசிஎஸ் நிறுவன மனிதவள பிரிவு தலைவர் கென்னத் ஜெயசீலன், கல்லூரி டீன் சுப்பாராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.