இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அரசியல் கடினமானது என பயமுறுத்துகிறார்கள்: மருத்துவ முகாமை துவக்கி வைத்து கமல் பேச்சு

11/7/2025 3:57:22 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

ஆவடி: நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63வது பிறந்த நாள். நற்பணி இயக்கம் சார்பில் அவரது பிறந்த தினத்தையொட்டி மருத்துவ முகாம் ஆவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. முகாமை கமல்ஹாசன் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த மருத்துவ முகாம் எங்கள் நற்பணி மன்றத்துக்கு புதிதல்ல. மழை காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முகாம் இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு முக்கியமானது. மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நாங்கள் பல ஆண்டுகளாக 550 மருத்துவ முகாம்களை தேவையான நேரத்தில் நடத்தியுள்ளோம். 130 இதய அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்துள்ளோம். நாங்கள் நிற்க வேண்டிய இடத்தில் நின்று வருகிறோம். இன்றும் அப்படித்தான். எங்கள் சேவையை ஊடகம் மூலம் இன்று உலகத்துக்கு காட்டுகிறார்கள்.

நாங்கள் அமைதியாக எங்களது வேலையை செய்து வருகிறோம். எங்கள் சேவை, முயற்சிகள் வலுபெறும். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. இது இல்லாமல்தான் முகாமை நடத்தி வந்தோம். இன்று அரசியலும் வந்துள்ளது. இதனை காட்டி, அதனை பயன்படுத்தவில்ைல. இதற்காக அதனையும் பயன்படுத்தி கொள்வோம். எங்களது பாதை கடினமானது என்று எல்லோரும் பயமுறுத்தி வருகிறார்கள். கனவு காண்கிறார் கமல் என்று எங்களை கூறுகிறார்கள். கனவு மூலம்தான் கண்டுபிடிப்புகள் வருகிறது. பெரிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் கனவுகளாகவும் ஆசைகளாகவும்தான் இருந்தது. பின்பு நினைவாக மாறியது.

கனவை நனவாக்கி பல கண்டுபிடிப்புகள் உருவானது. நாங்கள் கனவு காண்போம். அதனை நினைவாக்குவோம். நாங்கள் முயற்சி செய்வோம். இது நடக்கக்கூடிய விஷயம்தான். நமது அரசியலமைப்பு சட்டம் உலகத்திலேயே மிகவும் அற்புதமானது. அந்த அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் பெரிய வல்லுனர்கள். அந்த புத்தகம் நம் கையில் இருக்கிறது. மாற்றி எழுத முடியாத புத்தகம் அல்ல. தேவைப்பட்டால் மக்களுக்காக மாற்றி கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து

தமிழகம் முழுவதும் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து பிறந்த தின கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக தெரிவித்திருப்பதுடன் புதுயுகம் செய்ய புறப்படுங்கள் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கமல். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாளை என்பது மற்றுமொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேலை வருமெனத் தவமிருக்காது. காலையிலேயே புதுயுகம் செய்வோம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சில
  • சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு



  • மிடாஸ் கோல்டன் மதுபான ஆலையில் சோதனை



  • மன்னார்குடியில் தினகரன், திவாகரன் வீடுகள், கல்லூரியில் ஐ.டி ரெய்டு



  • கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறை ரெய்டு



  • சசிகலா வக்கீல் வீட்டில் சோதனை



  • அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் வீட்டில் ரெய்டு



  • ஐடி ரெய்டு வழக்கமானதுதான் வைத்திலிங்கம் எம்.பி பேட்டி



  • சோதனையின் போது கோ பூஜை நடத்திய டிடிவி தினகரன்



  • புதுவை அருகே ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை



  • தஞ்சையில் நடராஜன், திருச்சியில் இளவரசி சம்பந்தி வீட்டில் ரெய்டு: புதுகை நிர்வாகி வீட்டிலும் சோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]