இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார தவறு: மோடி ஒப்புக் கொள்ள மன்மோகன் சிங் வலியுறுத்தல்

11/7/2025 3:06:08 PM
சசிகலா, இளவரசியின் உறவினர்களுக்குச் சொந்தமான 187 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய பொருளாதார தவறு என்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொள்ள வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.நாடு முழுவதும் கருப்பு பண மீட்பு நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதனால் கரன்சிகளை மாற்றுவதற்காக வங்கிகளில் வரிசையில் நின்ற பொது மக்கள் 100க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் கருப்பு பணத்தையும் பெரிய அளவில் மீட்க முடியவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பண மதிப்பிழப்பு அறிவித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதை நாடு முழுவதும் அனுசரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில்  பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றை குறிவைத்து குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.இந்த சூழலில் தனியார் ஆங்கில டிவி சேனல் ஒன்றிற்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், பண மதிப்பிழப்பு சமூகத்தில் பலவீனமாக இருந்தவர்களையும்,  சிறிய தொழில்களையும் அதிகம் பாதித்துள்ளது. பணமதிப்பிழப்பை முன்வைத்து செய்த அரசியலுக்கான தருணம் முடிந்து விட்டது என நான் உறுதியாக  நம்புகிறேன். பிரதமர் மோடி தான் செய்த தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்.

தவறை ஏற்றுக் கொண்டு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை மீண்டும் சரி செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது. பொருளாதார  கொள்கைகளில் நிலையான கொள்கை கொண்ட தேசம் இந்தியா என்ற நற்பெயருக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை களங்கம் ஏற்படுத்தி விட்டது என்று  விமர்சித்துள்ளார்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு தினமான நவம்பர் 8ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் முடிவு  செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பெங்களூரில் வா.புகழேந்தி வீட்டில் ரெய்டு



  • மன்மோகன்சிங் சுயமாக பேசவில்லை: ரவிசங்கர் பிரசாத் கடும் தாக்கு



  • எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இந்தியா வருகை



  • கருத்தரங்கில் உணவு சாப்பிட்ட 69 விவசாயிகளுக்கு வாந்தி மயக்கம்



  • கரன்சி வாபசுக்கு பின்னர் 396 கோடி கருப்பு பணம் பறிமுதல்: சிபிஐ இயக்குநர் தகவல்



  • ஏழை மக்களின் கஷ்டங்களை அரசுகள் கண்டு கொள்வதில்லை: சுப்ரீம் கோர்ட் வேதனை



  • வாக்காளா் பட்டியலில் பிரியங்கா பெயர் நீக்கம்: உ.பி. அரசு நடவடிக்கை



  • இன்சூரன்ஸ் பாலிசியுடன் ஆதார் பான் எண் இணைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு



  • தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு திரைப்பட இயக்குனருக்கு செருப்பால்தான் பதில் அளிக்க வேண்டும்: பாஜ எம்பி கருத்தால் சர்ச்சை



  • பாதுகாப்புக்காக அல்லாமல் வேவு பார்க்கத்தான் போலீசார் எங்களை பின் தொடர்கின்றனர்: ஹர்திக் படேல் விளாசல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]