கூலிப்படையை ஏவி கொலை அதிமுக பிரமுகருக்கு வலை
10/27/2017 4:06:41 PM
புதுச்சேரி: புதுவை முதலியார்பேட்டையில் தொழிற்போட்டி காரணமாக ரவுடியை கூலிப்படை வைத்து அதிமுக பிரமுகர் தீர்த்துக் கட்டியது அம்பலமாகி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை முதலியார்பேட்டை, உடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் சின்னசெல்வம் (27). ரவுடியான இவர் சில தினங்களுக்கு முன்பு 10 பேர் கும்பலால் அப்பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சக்திவேல், அவரது தம்பி ரமேஷ், மணிகண்டன், நடராஜன் உள்பட 10 பேர் கும்பல் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ரவுடி சின்னசெல்வத்தை அதிமுக பிரமுகரான சக்திவேல், தொழிற்போட்டி முன்விரோதம் காரணமாக கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டியது அம்பலமானது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் சக்திவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்ட 5 பேரும் இன்று மாலை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.