இன்ஜினிரியர் தற்கொலை போனில் மிரட்டியது யார்? போலீசார் விசாரணை
10/27/2017 4:00:28 PM
ஆவடி: ஆவடி கிரி நகர் படை உடை தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தவர் ஹரிகரன் (25). இன்ஜினியரான இவர், தனது அண்ணன் மற்றும் அண்ணியுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், நேற்று பெரியபாளையத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலைக்கு இன்டர்வியூ சென்றார் ஹரிகரன். இன்டர்வியூ முடிந்ததும் அம்பத்தூரில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, ஹரிகரனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. உடனே பைக்கில் கிரி நகருக்கு புறப்பட்டார்.இந்நிலையில், தம்பிக்கு என்ன ஆனதோ தெரியவில்லையே என்ற அதிர்ச்சியில் அக்கா போன் செய்தார். ஹரிகரன், போனை எடுக்கவில்லை. உடனே அக்காவும், அவரது அம்மாவும் கிரி நகருக்கு சென்று பார்த்தனர். வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஹரிகரன் தூக்கில் பிணமாக கிடந்தார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து, போன் அழைப்பு வந்ததால்தான் ஹரிகரன் புறப்பட்டு சென்றார். அதனால் அவரை யாராவது போனில் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா? அப்படி என்றால் போனில் மிரட்டியது யார் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.