இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

10/26/2017 4:09:44 PM
ப்ளூடூத் மூலம் ஐஏஎஸ் தேர்வு எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு விமானத்துக்கு மிரட்டல் விடுத்தவருக்கு வாழ்நாள் தடை: மத்திய அரசு உத்தரவு

சென்னை : அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக டிடிவி.தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கடந்த 1996ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்க்லே வங்கி மூலம் டிப்பர் இன்வெஸ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 331 அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பாக டிடிவி.தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கின் குறுக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்கவும் மீண்டும் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தினகரன் மீது 2வது முறையாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வழக்கின் முதல் சாட்சியான முன்னாள் அமலாக்கத்துறை அதிகாரி கிஸ்தூர்சந்த் என்பவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் தினகரன் தரப்பு வக்கீல் 28ம் தேதி முதல் 11ம் தேதி விசாரணையை நடத்தினர். வழக்கின் 2வது சாட்சி மணி, 3வது சாட்சி அத்திரி, 4வது சாட்சி பாலசுப்பிரமணியம், 5வது சாட்சி கங்காதரன், 6வது சாட்சி கோபால் என 7,8,9,10 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
கடந்த 23ம் தேதி  11வது சாட்சி சீனிவாசன், 12வது சாட்சி மேத்தியூஸ் மேத்யூ ஆகியோரிடமும் குறுக்கு விசாரணை முடிக்கப்பட்டது. 12 பேரிடமும் குறுக்கு விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிடிவி.தினகரனிடம் விசாரணை நடத்த இன்று நேரில் ஆஜராகும்படி அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இவ்வழக்கு இன்று மீண்டும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தினகரன் நேரில் ஆஜரானார். இவ்வழக்கை பிற்பகலுக்கு  நீதிபதி தள்ளிவைத்தார்.

மேலும் சில
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை



  • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தயார்: காஞ்சி. கலெக்டர் அறிவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி போலீஸ்காரர் சாவு



  • மழை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பொன்னேரி ஆர்டிஓ திடீர் ஆய்வு



  • திருவள்ளூரில் தேவர் ஜெயந்தி



  • திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு



  • காதலி பேச மறுப்பு; வாலிபர் சாவு: உருக்கமான கடிதம் சிக்கியது



  • திருவொற்றியூர், மணலியில் வீடுகளில் மழைநீர் புகுந்தது



  • டெங்கு காய்ச்சலுக்கு பட்டதாரி பெண் பலி



  • மாடியில் நின்றபோது செல்போன் வெடித்தது இடி, மின்னல் தாக்கி 2 பேர் சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]