இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது: விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

10/13/2017 3:28:48 PM
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தினமும் உயிர் பலி என்பது தொடர் கதையாகி வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் உடல் நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் விஜயகாந்த் அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்குவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குப்பைகளை அகற்றினாலே இந்த பிரச்னையை தீர்த்திருக்கலாம். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்களோ, கட்சி தலைவர்களோ பார்க்க வரும் போது தான் அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்துகிறார்கள். மருத்துவமனையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. தமிழக அரசு நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து பணம் சம்பாதிக்க தான் பார்க்கிறது. மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கவில்லை.

டெங்கு பாதிப்பை பார்வையிட வரும் மத்தியக்குழுவால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. தமிழக அரசுக்கு டெங்கு நோயை  கட்டுப்படுத்துவதை விட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்துவதுதான் முக்கியமாக  இருந்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் டெங்கு  ஒழியும். சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. அரசு துரித நடவடிக்கை எடுத்தால் தான் டெங்குவை ஒழிக்க முடியும். எல்லா இடங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் டெங்கு பரவிய போது முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அவர்களின் பிரச்னையை தீர்க்கவே நேரம் சரியாக போகிறது. அதிமுக அரசு மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க தான் நினைக்கிறது. மக்கள் பிரச்னையை தீர்த்து வைத்து ஓட்டுக்களை பெறலாம் என்று நினைக்கவில்லை. சுகாதாரத்துறை எல்லா இடங்களிலும் சுத்தம் செய்து நடவடிக்கை மேற்கொண்டால் பெருமளவில் டெங்குவை ஒழிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை



  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சென்னை மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஆய்வு



  • தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் தமிழக அரசு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்



  • புதுகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா : 190 கோடி நல உதவிகள் முதல்வர் வழங்குகிறார்



  • கன்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் கருகி பலி



  • வரும் நவம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: செங்கோட்டையன் தகவல்



  • தமிழக காங்கிரஸ் தலைவர் யார்?: ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் இன்று சந்திப்பு



  • டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி



  • சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கூடாது குறைந்த விலையில் தின்பண்டம்: அரசிடம் வலியுறுத்த விஷால் முடிவு



  • ஊதிய உயர்வு கோரி காட்டாங்கொளத்தூரில் 3வது நாள் போராட்டம் தனியார் மருத்துவமனை நர்ஸ்கள் கைகளை பிடித்து இழுத்து தனி அறையில் சரமாரி தாக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]