இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கவர்னருடன் திடீர் சந்திப்பு; தேமுதிக தனித்து போட்டியிடும் : விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

10/7/2025 2:45:51 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அப்போது, அவர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சந்திப்பின் போது துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் உடன் இருந்தார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்தது. சந்திப்புக்கு பின்னர் விஜயகாந்த் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து எழுத்து பூர்வமாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தோம். புதிய கவர்னர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மோசமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அரசு முழித்திருக்கிறதா? தூங்கிக் கொண்டிருக்கிறதா? என்று தெரியவில்லை. மழைக்காலத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

வருகிற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடனும் கூட்டணி அமைக்காது. தனித்து போட்டியிடும். உங்களுக்கு ஒரு கும்பிடு உங்கள் கூட்டணிக்கு ஒரு கும்பிடு. எம்ஜிஆர் எனக்கு பிடித்த நடிகர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களை அழைத்து செல்வது கண்டிக்கத்தக்கது. சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. அதனால் மணி மண்டபம் திறப்பு விழாவில் நான் பங்கேற்கவில்லை.  ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அரசியலுக்கு வந்து விட்ட என்னை பற்றி ரஜினி, கமலிடம் கேளுங்கள்.

மேலும் சில
  • வாக்கி டாக்கி ஊழலில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரன் பதவியில் நீடிக்க கூடாது: தலைமை செயலாளரிடம் திமுக நேரில் வலியுறுத்தல்



  • தமிழகம் முழுவதும் போலீசாருக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’



  • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு தடாலடி



  • குஜராத்தைப் போல தமிழகத்திலும் பா.ஜ. ஆட்சி அமைந்தால் சிறப்பாக இருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ஹஜ் மானியத்தை நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி வேண்டுகோள்



  • பாஜ அரசின் அடக்கு முறைகளை எதிர்த்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் இணைய வேண்டும்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வலியுறுத்தல்



  • தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்



  • ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்



  • நடிகை ஸ்ருதி ஹாசன் மீது கன்னட நடிகர் கடும் தாக்கு



  • நான் ஸ்லீப்பர் செல்லா?: அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]