இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு அருண் ஷோரி தாக்கு

10/7/2025 2:44:05 PM
தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு டெங்கு : சுகாதாரத்துறை செயலாளர் தகவல் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு ஜெ.வின் சொத்துகளுக்கு நான்தான் வாரிசு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: மோடியை பிரதமராக்க வேண்டும் என நான் ஆதரவு தெரிவித்தது மிகப் பெரிய தவறு என அருண் ஷோரி தாக்கியுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கசவுலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மோடியை பிரதமராக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். வி.பி.சிங்குக்கு ஆதரவு தெரிவித்த பிறகு நான் செய்த மிகப் பெரிய இரண்டாவது தவறு இதுவாகும்.
 
ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன. ஆட்சியாளர்கள் தற்போது என்ன பேசுகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை. கடந்த காலத்தில் இவர்கள் என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அவர்கள் அப்போது என்ன சொன்னார்கள், தற்போது என்ன செய்தார்கள் என்பதை கொண்டுதான் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். குஜராத் மாடல் போன்றவை தோல்வி அடைந்து விட்டன. அதை ஊடகங்கள் முறையாக ஆய்வு செய்ய தவறிவிட்டன.

அதனால் தற்போது இதை நாம் உணர்கிறோம். குஜராத் மாடல் ஒரு போதும் முதன்மையான ஒன்றாக இருக்க முடியாது. குஜராத்தில் நடைபெற்ற 9 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10 லட்சம் கோடி, 15 லட்சம் கோடி முதலீடு செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இறுதியில் நடந்தது என்ன வெறும் 6 சதவீதம் கூட வரவில்லை. வேலை வாய்ப்பிலும் அரசு தோல்வி அடைந்து விட்டது. ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் 15 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். ஆனால் இவர்கள் என்ன சொன்னார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்போம் என்றனர். ஆனால் அப்படியான ஒன்றை எங்கும் நம்மால் காண முடியவில்லை என்றார்.

மேலும் சில
  • ஊழல் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்: தெலங்கானா முதல்வர் பேச்சு



  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை சிறையில் தள்ளுவோம்: உ.பி. பாஜ அமைச்சர் பேச்சால் சர்ச்சை



  • ‘சிபிஐ பெயரைக் கூறி தொடர்ந்து மிரட்டுகிறார்’ கவர்னர் கிரண்பேடி மீது புதுவை அமைச்சர் குற்றச்சாட்டு: ஜனாதிபதிக்கு கடிதம்



  • டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்



  • பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன் பெற்றார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • அரசுக்கு கட்டணம் பாக்கி வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை நிராகரிப்பு



  • அரசியல் கொலைகளை கண்டித்து டெல்லியில் பேரணி கேரளாவில் பாஜ செல்வாக்கை தடுக்க ஆளும் சிபிஎம் நினைக்கிறது: அமித்ஷா குற்றச்சாட்டு



  • கீழ் நீதிமன்றங்களில் பெண்கள் வழக்கு தொடர்வது மிகவும் குறைவு: ஆந்திரா முதலிடம்; குஜராத் கடைசி



  • திரிணாமுலில் இருந்து விலகிய முகுல் ராய் விரைவில் தனிக்கட்சி: உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க திட்டம்



  • ஜிஎஸ்டியால் 30 லட்சம் பேர் வேலை இழந்தனர்: ராகுல் அட்டாக்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]