இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சாரண சாரணியர் தலைவர் தேர்தல் தொடங்கியது எச்.ராஜா வெற்றிபெறுவாரா?: ஆதரவாளர்கள் மோதல்: சென்னையில் பரபரப்பு

9/16/2017 3:04:08 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

சென்னை: சாரணர் சாரணியர் இயக்கத் தேர்தல் இன்று காலை சென்னையில் தொடங்கியது. தேர்தலை நிறுத்தும்படி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜாவின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலை நிறுத்த மறுத்த அதிகாரிகள் மாலையில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தமிழ்நாடு சாரணர் சாரணியர் இயக்க தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு கடந்த 2013ல் இந்த தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் 18ல் சாரணர் அமைப்பின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செப்டம்பர் 16ம் தேதி தேர்தல் நடத்த  முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று சாரணர், சாரணியர் இயக்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில், தலைவர் பதவியில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவியில் ஆண்கள் பிரிவில் 3 பேர், முதன்மை ஆணையர் உள்ளிட்ட ஒரு சில பதவிகளுக்கும் நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர். சாரணர், சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு எச்.ராஜா போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாணவர்கள் மத்தியில் மதவாத்தை திணிக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திக தலைவர் வீரமணி ஆகியோர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இந்த தேர்தல் பார்வையாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அலுவலராக கலாவதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மேற்பார்வையில் தான் இந்த தேர்தல் தொடங்கியது. இதில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சாரணர், சாரணியர் இயக்க உறுப்பினர்கள் 499 பேர் வாக்களிக்க ஆர்வத்துடன் வந்தனர். இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் எச்.ராஜா தரப்ைப சேர்ந்த ரமேஷ் என்பவர் வாக்கு பதிவு நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர், தேர்தல் நடத்தும் அதிகாரி கலாவதியிடம் சாரண, சாரணியர் மத்திய தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்தலை நிறுத்தி வைக்க கோரி கடிதம் வந்ததாக கூறியுள்ளனர். எனவே, தேர்தலை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ெதரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் அதிகாரி கலாவதி எங்களுக்கு இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. எனவே, தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தல் நிறுத்தி வைக்க முடியாது என்று கூறினார். இதனால், எச்.ராஜா தரப்புக்கும், தேர்தல் அதிகாரி கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், எச்.ராஜா தரப்பை சேர்ந்தவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் மீண்டும்  தேர்தல் நடந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து எச்.ராஜா தரப்பு கூறும் போது, வாக்கு பதிவில் முறைகேடு நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் நாங்கள் மத்திய தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தோம். அந்த புகாரின் பேரில் தேர்தல் நிறுத்தி வைக்க கடிதம் அளித்துள்ளனர். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரி இதை ஏற்க மறுக்கிறார்’ என்றார். இந்த தேர்தல் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்பட உள்ளன. அதன் பிறகே ராஜா வெற்றி பெறுவாரா என்று தெரியவரும்.


மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]