இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

109வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை: திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

9/15/2017 4:34:11 PM
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுஷ்மா அமெரிக்கா பயணம் : டிரம்ப் தலைமையிலான கூட்டத்திலும் பங்கேற்கிறார்

சென்னை: அண்ணாவின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா திமுக சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அண்ணா சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிலை அருகில் அண்ணாவின் திருஉருவ படம் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டிருந்தன. காலை 9.30 மணி அளவில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். பின்னர், இருவரும் அண்ணா சிலை மற்றும் அவரது உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைதொடர்ந்து, திமுகவின் பிற நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில், முதன்மை செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்பி, துணை பொதுச்செயலாளர் விபி.துரைசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ.இளங்கோவன், ஆற்காடு வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ரங்கநாதன்,

கே.எஸ்.ரவிச்சந்திரன், கு.க.செல்வம், பிடிஆர்.தியாகராஜன், தாயகம் கவி, ஆர்.டி.அரசு, சிம்லா முத்துசோழன், பகுதி செயலாளர்கள் அகஸ்டின்பாபு, அன்புதுரை, ராமலிங்கம், நந்தனம் மதி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகர்ராஜா, சிற்றரசு, ஈரோடு இறைவன், மாணவர் அணி துணை செயலாளர் மோகன், எல்.பலராமன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தொமுச சார்பில் பேரவை சுப்புராமன், பொதுச்செயலாளர் சண்முகம், நடராஜன், சிங்கார ரத்தினசபாபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றனர்.

மேலும் சில
  • காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் ஏற்பாடுகள் தீவிரம்



  • அரசியல் களத்தில் வெற்றிபெற சிவபோக சக்கரத்தில் ஓபிஎஸ் வழிபாடு



  • கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம் அடுத்த மாதம் திறப்பு



  • சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்



  • தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை திடீர் ரத்து : நம்பிக்கை வாக்கெடுப்பு மேலும் தாமதம் ஆகலாம்



  • இரட்டை இலை சின்னத்தை மீட்க ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு தலைவர்கள் டெல்லி பயணம்



  • உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் : ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல்



  • டிடிவி அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகர் அதிரடி உத்தரவு



  • சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவு சூறைக்காற்றுடன் மழை தமிழகத்தில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் நாளை தமிழகம் வருகை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா?



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]