மனைவி, குழந்தை வெட்டி கொலை கணவனும் தூக்கிட்டு தற்கொலை: நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்
9/15/2017 4:14:38 PM
சித்தூர்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தொட்டனசேரி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா(29). கர்நாடக மாநிலம் கோலார் மண்டலம் தாசாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுசிலம்மா(25). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஜெயஸ்ரீ என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாகப்பா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நாகப்பா, வீட்டில் இருந்த கோடாரியால் சுசிலம்மாவின் கழுத்துஉள்பட, உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது அருகில் இருந்த குழந்தை ஜெயயையும் கோடாரியால் சரிமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாகப்பா அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த ஆதோலி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.