இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ப்ளூவேல் கேம் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு : குஜராத் மாநில அரசு அறிவிப்பு

9/8/2025 3:28:32 PM
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் ரத்து

அகமதாபாத் : உலகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் உயிரை காவு வாங்கிய ப்ளூவேல் கேம் ரஷ்யாவில் 17 வயது சிறுவனால் உருவாக்கப்பட்டது. இந்த கேம் ஏற்கனவே வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு விட்டது. ரஷ்ய இளைஞரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கேம் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அண்மையில் ரஷ்யாவில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த கேம் தொடர்ந்து செல்போன் வாயிலாக இளைஞர்களை கவர்ந்து வருகிறது. இந்த விளையாட்டுக்குள் இழுக்கப்படுபவர்கள் தினமும் ஏதேனும் ஒரு சவாலை மேற்கொள்ள வேண்டும். அதனை வீடியோ எடுத்து அப்லோட் செய்ய வேண்டும். இந்த சவால் பல சமயங்களில் உயிரை பறிப்பதாக இருப்பதால் தற்போது இந்த கேமுக்கு இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள், இளைஞர்கள் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விளையாட்டை கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் நடத்தும் அட்மினஸ்ட்ரேட்டர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் பிரதிப்சின் ஜடேஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத்தில் ப்ளூவேல் கேம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் படி அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் எஸ்பிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் மோசமான விளைவுகள் குறித்து அறிந்து கொள்ள இலவச போன் நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தங்களது குழந்தைகள் இந்த கேம் விளையாடுவது தெரிந்தால் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தனி ஹெல்ப்லைன் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளூவேல் நடத்துபவர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும். அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் சில
  • விரிவாக்கத்திற்கு பிறகு முதன்முறையாக மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: டெல்லியில் இன்று மாலை நடக்கிறது



  • டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் மனித மாமிசம் சாப்பிடும் போராட்டம்



  • அரியானா பள்ளி மாணவன் கொலை மத்திய, மாநில அரசுகளுக்கு 3 வார கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி



  • உ.பி மேல்சபை இடைத்தேர்தலில் பாஜ அனைத்து இடங்களிலும் வெற்றி



  • புளூவேல் விளையாட்டு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு: 15ம் தேதி விசாரணை



  • லாலு குடும்பத்துக்கு சொந்தமான 165 கோடி சொத்துக்கள் பறிமுதல்: வருமானவரித்துறை அதிரடி



  • புதுவை நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் டெல்லியில் முகாம் புதுவை நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் டெல்லியில் முகாம்



  • போலி சாமியார் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது: திக் விஜய் சிங் கிண்டல்



  • செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீடித்தால் குழப்பம் வரும்



  • பெண் பத்திரிக்கையாளர் கொலை, ரோஹிங்கியா விவகாரம்: இந்திய அரசுக்கு ஐநா மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]