இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இலங்கை நீதிமன்றம் விடுவித்த 80 தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்தனர்

9/5/2025 3:51:08 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

காரைக்கால் : புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த 80 மீனவர்கள், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு  இடங்களில் மீன் பிடித்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். 80  மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என, மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில  அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில் இருநாட்டு நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 80 பேரை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தை  சேர்ந்த 48 மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர், ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 பேர், மண்டபம் பகுதியை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 80 பேரை கடந்த ஆக.31ம்  தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் இலங்கை  கடற்படையினர் மூலம், நேற்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு  கப்பலில் 80 பேரையும் காரைக்காலில் உள்ள மார்க் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். காரைக்கால் வந்த 80 மீனவர்களை, நாகை கலெக்டர் சுரேஷ்குமார், எம்.எல்.ஏ  தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும் சில
  • இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு 18% ஜிஎஸ்டி எதிர்த்து 22 லட்சம் பேர் கையெழுத்து: பிரதமருக்கு அனுப்பப்பட்டது



  • அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்



  • வேளாங்கண்ணியில் நாளை தேர் பவனி



  • பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்



  • நள்ளிரவில் சுடுகாட்டில் செல்பி ப்ளூவேல் விளையாட்டில் சிக்கிய காரைக்கால் வாலிபரை மீட்டது போலீஸ்



  • வீட்டு சுவர் இடிந்து தம்பதி, மகள் பலி: மயிலாடுதுறை அருகே பரிதாபம்



  • நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்துக்கு சீல்



  • 144 தடை உத்தரவு ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு



  • டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர் சிறுவன் பலி



  • நீட் தேர்வு பயிற்சிக்காக 412 மையம்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]