இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பணப்புழக்கம் அதிகமாக நடமாடியதை தொடர்ந்து டிராவல்ஸ் அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

9/5/2025 3:47:04 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

சென்னை: பணப்புழக்கம் அதிகளவில் நடமாடுவதாக வந்த தகவலை தொடர்ந்து டிராவல்ஸ் அதிபர் வீடு, அலுவலகத்தில் ேநற்று நள்ளிரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.2.75 ேகாடி பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது.சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. அவின்யூ, திருவிதி அம்மண் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழன்(35). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய  நிறுவனத்தில் ஆம்னி பேருந்து, சொகுசு கார் என 50க்கும் மேற்பட்ட வாகனம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிராவல்ஸ் அதிபர் தமிழனிடம் அதிகளவில் பணப்புழக்கம் நடமாடியதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று இரவு வேளச்சேரி  போலீசார் தமிழன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பணம் இருப்பது குறித்து உங்களிடம் நான் கூற முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேளச்சேரி போலீசார் அதிகளவில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி 4 பேர் கொண்ட  அதிகாரிகள் குழு டிராவல்ஸ் நிறுவன அதிபர் தமிழன் வீடு மற்றும் அதே தெருவில் உள்ள அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அலுவலகம் மற்றும்  வீட்டில் ரூ.2.75 கோடி பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.  அதில் ரூ.2 கோடி புதிய ரூ.2000 நோட்டுக்கள் ஆகும். இதையடுத்து பணத்தை வருமான வரித்துறை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான கணக்கு வழக்குகள் குறித்து தமிழன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் தமிழன் வாகனம் வாங்கியதற்கு மாத தவணை கட்டுவதற்காக இந்த பணத்தை வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

 ஆனால் ஒரே சீரியல் வரிசையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த பணம் எங்கிருந்து வந்தது. வங்கியில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் பறிமாற்றம்  செய்யப்படுவதில்லை. அப்படி இருக்க ரூ.2.75 கோடி பணம் எப்படி வந்தது. டிராவல்ஸ் நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு முறையாக வருமான வரி  கட்டப்பட்டுள்ளதா? அனைத்து வாகனங்களும் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை  நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் சில
  • இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு 18% ஜிஎஸ்டி எதிர்த்து 22 லட்சம் பேர் கையெழுத்து: பிரதமருக்கு அனுப்பப்பட்டது



  • அணுமின் நிலையத்தை எதிர்த்து போராட்டம் உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் ஆஜர்



  • வேளாங்கண்ணியில் நாளை தேர் பவனி



  • பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: பஸ் உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்



  • நள்ளிரவில் சுடுகாட்டில் செல்பி ப்ளூவேல் விளையாட்டில் சிக்கிய காரைக்கால் வாலிபரை மீட்டது போலீஸ்



  • வீட்டு சுவர் இடிந்து தம்பதி, மகள் பலி: மயிலாடுதுறை அருகே பரிதாபம்



  • நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்துக்கு சீல்



  • 144 தடை உத்தரவு ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு



  • டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூர் சிறுவன் பலி



  • நீட் தேர்வு பயிற்சிக்காக 412 மையம்:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]