டைரியில் தேதி குறித்து திருடிய ஆசாமி கைது
8/24/2017 3:51:59 PM
கோவை: கோைவ சிங்காநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திருடுவது, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று சிங்காநல்லூர் பஸ்ஸ்டாண்ட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் சுற்றிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர் கோவை நீலிக்கோனாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(36) என தெரியவந்தது. இவர், சிங்காநல்லூர் பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என தெரியவந்தது. அவரிடம் இருந்து டைரி ஒன்றை பறிமுதல் செய்தனர்.
அந்த டைரியில் செந்தில்குமார் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ேகாயில்களின் பெயர், முகவரி, அந்த கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா நடக்கும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டிருந்தார். இந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடக்கும் போது செந்தில்குமார் தனது மனைவியுடன் சென்று கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. செந்தில்குமாரை கைது செய்த போலீசார் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.