இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தொடர் ரயில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு பணியில் 2 லட்சம் பேர்: ரயில்வே அமைச்சகம் திட்டம்

8/24/2017 3:26:25 PM
பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி நட்சத்திர ஓட்டலுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ வருகை

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து நடந்த இரு ரயில் விபத்துகளின் எதிரொலியாக ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். ரயில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் இது தொடர்பான பாதுகாப்பு பணியில் மேலும் 2 லட்சம் பேரை புதிதாக நியமிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாஜ அரசு மத்தியில் அமைந்த  பிறகு கடந்த 3 ஆண்டுகளில் 135 ரயில் விபத்துகள் நடந்துள்ளன.

60 சதவீத உயிரிழப்புகள் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளில் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2019ம் ஆண்டுக்குள் அனைத்து ஆளில்லாத லெவர் கிராசிங்குகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர கட்டுமானத்தில் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுமான பணிகளுக்காக ரூ. 4 லட்சம் கோடி செலவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் பாதுகாப்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகளின் உற்பத்தி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் துருபிடிக்காத, தீப்பிடிக்காத, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில் பெட்டிகளை ஐசிஎப் தயாரித்து வழங்க உள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் காலி இடங்கள்  எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. தற்போது பாதுகாப்பு பணிகளுக்காக 37 ஆயிரம் பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி மொத்த பாதுகாப்பு பணியாளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரமாக உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக மேலும் 2 லட்சம் பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் சில
  • பஞ்சாப், அரியானா வன்முறை பலி 32 ஆனது: வன்முறை குறித்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு



  • அரசு இணையதளங்களுக்குள் ஊடுருவி ஆதார் தகவல்களை சுருட்ட அமெரிக்க உளவுத்துறை முயற்சி: விக்கி லீக்ஸ் பகீர் குற்றச்சாட்டு



  • மத்திய அமைச்சர் சுஷ்மாவை காணவில்லை: ம.பி.யில் பரபரப்பு போஸ்டர்



  • உ.பி.யில் வெள்ளப்பெருக்கு பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு



  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் ராக்கிங் செய்த 5 மாணவர்கள் சஸ்பெண்ட்



  • பீகாரில் வருகிற 27ம் தேதியன்று லாலு நடத்தும் பேரணி: சோனியா, மாயாவதி புறக்கணிப்பு



  • பீகாரில் மழை வெள்ளம் பலி எண்ணிக்கை 367 ஆனது: அசாம், உ.பி., மே.வங்கத்திலும் கடும் பாதிப்பு



  • முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டி: கோவா இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு



  • டெல்லியில் பன்றிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்



  • பீகாரில் உச்சக்கட்ட மோதல்: நாங்கள் தான் உண்மையான ஜேடியு: தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]