மத்திய பிரதேசத்தில் பள்ளி அருகே அமோனியா கசிவு மாணவர்கள் 50 பேர் மயக்கம்
8/24/2017 3:21:38 PM
போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிக்கு அருகே இருந்த குளிரூட்டப்பட்ட கிட்டங்கியிலிருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதில் 50 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மத்திய பிரதேச மாநலம் சிந்த்வாராவில் உள்ள குளிரூட்டப்பட்ட குடோனிலிருந்து நேற்று திடீரென அமோனியா வாயு கசிந்தது. இது அருகில் உள்ள தனியார் பள்ளியில் பரவியது. அப்போது பள்ளியில் 800 மாணவர்கள் இருந்தனர். இவர்களில் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. சுமார் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயின் கூறுகையில், பாதிக்கப்பட்ட 50 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவச் சோதனை முடிந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளோம், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம், குளிரூட்டப்பட்ட குடோன் உரிமையாளரிடம் விசாரணை செய்து வருகிறோம் என்றார். குடோனில் உள்ள சிலிண்டர் வெடித்ததனால் அமோனியா வாயு வெளியானதாகவும், தற்போது சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.