இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

8/9/2025 4:58:49 PM
சுப்ரீம் கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க முடிவு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் கமிஷனர் சிறையில் அடைப்பு: அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என்று கூறி தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஜிஎஸ்டி கூடாது என்று கூறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவிற்கான ஜிஎஸ்டியை ரத்து செய்யவேண்டும். அது இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் என்று கோஷம் எழுப்பினர்.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் சங்கரன் கூறியதாவது: 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வருவதற்கு முன்னதாக பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களுக்கு உற்பத்தி வரி விதிக்கப்படவில்லை. ஐந்து சதவீதம் வாட் வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் கழிவுகள் இரண்டு வகையாக உள்ளன. அவை தொழிற்சாலையில் இருந்து பெறப்படும் கழிவுகள், தெருக்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள். தெருக்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் தெருக்களில் பிளாஸ்டிக் குப்பை எடுப்பவர்களுக்கான வருவாய் குறையும். இதனால் தெருக்களில் பிளாஸ்டிக் குப்பை தேங்கும்.

நம் நாட்டில் 60 முதல் 70 சதவீதம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது. தெருக்களில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவீதம் வரி விதித்தது, தூய்மை இந்தியா திட்டத்துக்கு எதிரானது. மேலும் தெருக்களில் சேரும் குப்பை, கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவு செய்கின்றன.

அதனால் இந்த மறு சுழற்சி செய்யும் தொழிலுக்கு வரி விதிக்கக்கூடாது. இது இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களை நேரடியாக பாதிக்கின்றது.  மத்திய அரசுக்கு எங்களின் நியாயமான கோரிக்கை, அதன் நியாயம் தெரிய வேண்டும் என்றே  18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்

மேலும் சில
  • அமைச்சர் செல்லூர் ராஜூவை டிஸ்மிஸ் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு



  • ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் கமிஷனர் சிறையில் அடைப்பு: அதிரடி சஸ்பெண்ட்



  • வங்கதேசத்துக்கு தப்ப முயன்றபோது டெல்லியில் தீவிரவாதி கைது



  • மீண்டும் இலங்கை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு



  • அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் பலி: சிறுமி உடலுடன் மக்கள் மறியல்



  • போலீஸ் உடற்தகுதி தேர்வில் முறைகேடு அமைச்சு பணியாளர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்



  • நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப்பை 2வது குற்றவாளியாக சேர்க்க போலீசார் முடிவு



  • டாஸ்மாக் அருகே ரத்தகாயங்களுடன் உடல் கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரி அடித்துக் கொலை



  • ஏற்கனவே பலர் பதவியை தூக்கி எறிந்த நிலையில் டிடிவி.தினகரன் மீண்டும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்



  • திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு: வி.சிறுத்தைகள், புரட்சி பாரதம் கொடி கம்பங்கள் வெட்டி சாய்ப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]